செய்திகள் :

Elon Musk: "அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது; ஏனென்றால்.." - எலான் மஸ்க் சொல்லும் காரணம்

post image

நீங்கள் 2028-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு நிகழ்ச்சி ஒன்றில் பதிலளித்துள்ளார் எலான் மஸ்க்.

உலகப் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதில் ஜனநாயகக் கட்சி சார்பாகக் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பாக டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு வரை, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிராகப் பேசி வந்த எலான் மஸ்க், தற்போது டிரம்பிற்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்து வருகிறார்.

எனக்கு 'இதில்' தான் விருப்பம்!

இந்நிலையில், அமெரிக்காவில் 'வோட் ஏர்லி (Vote Early)' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எலான் மஸ்கிடம், "2028-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுவீர்களா?" என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், "என்னுடைய தாத்தா அமெரிக்கர். ஆனால், நான் பிறந்தது ஆப்பிரிக்காவில். அதனால் என்னால் தேர்தலில் போட்டியிட முடியாது. எனக்கும் அதிபர் ஆக வேண்டாம்... ராக்கெட் மற்றும் வாகனங்களைத்தான் உற்பத்தி செய்ய வேண்டும்.

20 ஆண்டுகளுக்கு முன்பும் இதைத்தான் கூறினேன். இப்போதும் அதைத்தான் கூறுகிறேன். எனக்கு விண்வெளி ஆராய்ச்சியிலும், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியிலும் ஆர்வம் அதிகம். அதில் கவனம் செலுத்த விரும்புகிறேன். மேலும் மக்களுக்கு உதவிக்கரமான தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும். நான் டிரம்ப் அதிபராக ஆக வேண்டும் என்று விரும்புகிறேன். அவர், அதிபர் ஆன பின் குடியரசுக் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும். அதன் பிறகு, நான் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று நம்புகிறேன்" என்று பேசியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

`ராஜ கண்ணப்பன் மகன்கள் மூலம் ரூ.411 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அபகரிப்பு’ - அறப்போர் இயக்கம்

'அமைச்சர் ராஜகண்ணப்பன் தன் மகன்கள் மூலம் கிட்டதட்ட ரூ.400 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாக' அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

காமராஜர் குறித்து `சர்ச்சை கருத்து' தெரிவித்த திமுக ராஜீவ் காந்தி; கொதித்த காங்கிரஸ், தமிழிசை

'காமராஜர் சொந்த காசிலா பள்ளிக்கூடங்களை திறந்தார்' என்று திமுக மாணவர் அணி நிர்வாகி ராஜீவ் காந்தி பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.'காமராஜர் சொந்த காசிலா பள்ளிக்கூடங்களை திறந்தார். பெரியார் அறிவுறுத... மேலும் பார்க்க

Stalin: "சென்னை வருகிறேன் என்றார்; வந்தார். ஆனால்..." - முரசொலி செல்வம் குறித்து ஸ்டாலின் உருக்கம்

கடந்த 10 ஆம் தேதி முரசொலி நாளிதழ் நிர்வாக ஆசிரியராக இருந்த முரசொலி செல்வம் காலமானார்.இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முரசொலி செல்வத்தின் படத் திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் நேற்று (21.10.202... மேலும் பார்க்க

கேரளா: பத்மநாப சுவாமி கோவிலில் பூஜை உருளி திருட்டு; ஆஸ்திரேலிய மருத்துவர் மீது வழக்கு; நடந்தது என்ன?

கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலம் திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமிகோயில் ஆகும். திருவிதாங்கூர் மன்னர்ஆட்சிக்காலத்தில் அவர்களது குலதெய்வமாக வழிபட்டு வந்த ஸ்ரீபத்மநாபசுவாமிகோயிலில், மூலவர் சு... மேலும் பார்க்க

ADMK: "விருதுநகருக்கு மூன்று அமைச்சர்கள் லட்சியம்; ஒரு அமைச்சர் நிச்சயம்!" - ஆர்.பி.உதயகுமார் உறுதி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சங்கம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குச் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி. உதய... மேலும் பார்க்க

குடியாத்தம்: கிழித்து நீக்கப்பட்ட தவெக போஸ்டர்கள் - ஆளும் தரப்பு மீது கடுகடுக்கும் நிர்வாகிகள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) `முதல் மாநாடு’ வரும் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவிருக்கிறது.தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய்யின் அரசியல் அத்தியாயத்துக்கான முதல் ... மேலும் பார்க்க