செய்திகள் :

பாலஸ்தீன குழந்தைகள் உணவின்றி தவிப்பு: இந்தியாவிலிருந்து 30 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு!

post image

பாலஸ்தீனத்துக்கு இந்தியாவிலிருந்து 30 டன் நிவாரணப் பொருள்கள் இன்று(அக். 22) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஹமாஸ் படைக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை தொடுத்து வருகிறது. பாலஸ்தீன மக்களின் வசிப்பிடமான காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நிகழ்த்தி வரும் தொடர் தாக்குதல்களால், காஸாவில் வாழும் மக்கள் போதிய உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பாலஸ்தீனத்துக்கான ஐ.நா.வின் நிவாரணப் பணிகள் முகமை மூலம் பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா சார்பில் மனிதாபிமான உதவியாக நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 30 டன் மருந்துகள் மற்றும் உணவுப் பொருள்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பாலஸ்தீனத்துக்கு இன்று அனுப்பப்பட்டுள்ள முதல் தொகுதியில், அத்தியாவசிய மருந்துகள், அறுவைச் சிகிச்சைக்கான மருந்து மற்றும் உபகரணங்கள், பல் மருத்துவம் சம்பந்தப்பட்ட பொருள்கள், பொது மருத்துவ சிகிச்சைக்கு தேவைப்படும் பொருள்கள், கலோரி அதிகம் நிறைந்த பிஸ்கட்டுகள் ஆகியவை அடங்கும்.

இந்த தகவலை வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகத்தின் செய்தித்தொடர்பளர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

உணவு டெலிவரி செய்து இந்திய தம்பதியுடன் உரையாடிய டிரம்ப்!

மெக் டொனால்டு கடையில் பிரெஞ்ச் பிரைஸ் தயாரித்த அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப், புலம்பெயர்ந்த இந்திய தம்பதிக்கு டெலிவரி செய்து அவர்களுடன் கலந்துரையாடினார்.இந்திய தம்பதியும் டிரம்பும் உரையாட... மேலும் பார்க்க

பெருவின் முன்னாள் அதிபருக்கு 20 ஆண்டு சிறை!

பெருவின் முன்னாள் அதிபர் அலெஜான்ட்ரோ டோலிடோவுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பெருவின் முன்னாள் அதிபர் அலெஜான்ட்ரோ டோலிடோ பிரேசிலில் உள்ள கட்டுமான நிறுவனத்துடன் ஊழலில் ஈடுபட்டதாக 20 ஆண்ட... மேலும் பார்க்க

மால்டோவா பொதுவாக்கெடுப்பு: ஐரோப்பிய யூனியனில் இணைய பெரும்பான்மை ஆதரவு

சிஸினா: கிழக்கு ஐரோப்பாவைச் சோ்ந்த மால்டோவாவை ஐரோப்பிய யூனியனுடன் இணைப்பதற்கு வழிவகை செய்யும் அரசியல் சாசனத் திருத்தம் மேற்கொள்வது தொடா்பாக அந்த நாட்டில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தலைமை நீதிபதிகளின் பதவிக் காலத்துக்கு வரம்பு

இஸ்லாமாபாத்: தலைமை நீதிபதிகளின் பதவிக் காலத்துக்கு மூன்று ஆண்டுகள் வரம்பு நிா்ணயிக்கும் சட்டம் பாகிஸ்தானில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின் கீழ், தலைமை நீதிபதியை நியமிப்பதற்காக மூன்ற... மேலும் பார்க்க

ஹிஸ்புல்லா தொடா்புடைய வங்கிகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

பெய்ரூட்: லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினருடன் தொடா்புடைய வங்கிக் கிளைகளைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.இது குறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:தலைநகா் பெய்ரூட்டின் தெ... மேலும் பார்க்க

ரஷிய தூதருக்கு தென் கொரியா சம்மன்

சியோல்: உக்ரைனில் ரஷியாவுக்காகப் போரிட வட கொரிய சிறப்புப் படையினா் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து, தங்கள் நாட்டுக்கான ரஷிய தூதா் ஜாா்ஜி ஸினோவீவை தென் கொரிய அரசு நேரில் அழைத்து கண்ட... மேலும் பார்க்க