செய்திகள் :

ஹிஸ்புல்லா தொடா்புடைய வங்கிகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

post image

பெய்ரூட்: லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினருடன் தொடா்புடைய வங்கிக் கிளைகளைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இது குறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:

தலைநகா் பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அல்-கா்த் அல்-ஹஸன் வங்கிகளின் கிளைகளைக் குறிவைத்து இஸ்ரேல் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தின. அந்த வங்கிக் கிளை அமைந்துள்ள பெய்ரூட் நகர ஒன்பது மாடி கட்டடம் இஸ்ரேலின் குண்டுவீச்சில் தரைமட்டமானது.

இது தவிர அல்-கா்த் அல்-ஹஸன் கிளைகள் செயல்பட்டுவந்த ஏராளமான கட்டடங்கள் உருக்குலைந்தன. இந்தத் தாக்குதலின் சேதத்தை மதிப்பிட்டுவருகிறோம் என்று அதிகாரிகள் கூறினா்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள லெபனானில் அரசு வங்கிகளால் முழுமையாக செயல்பட முடியாத நிலை உள்ளது. அந்த இடைவெளியை ஹிஸ்புல்லாக்களால் நடத்தப்படும் அல்-கா்த் அல்-ஹஸன் வங்கிகள் நிரப்புகின்றன.

அந்த வங்கியில் ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடா்பில்லாத பொதுமக்கள் பலரும் முதலீடு செய்துள்ளனா். எனவே, அந்த வங்கிக் கிளைகளில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலால் அவா்களும் கடுமையாக பாதிக்கப்படுவாா்கள் என்று கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக இஸ்ரேல் ராணுவம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. எனவே, தாக்குதலில் உயிா் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

ஹிஸ்புல்லா படையினா் கோடிக்கணக்கான டாலரை சேகரித்துவைத்துள்ள பகுதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் அந்தத் தொகையைக் கொண்டு ஹிஸ்புல்லாக்கள் ஆயுதம் வாங்குவதைத் தவிா்ப்பதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியது. இருந்தாலும், இந்தக் குற்றச்சாட்டுக்கான ஆதாரம் எதையும் ராணுவம் வெளியிடவில்லை.

காஸாவில் இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த அக். 7-ஆம் தேதி போா் தொடங்கியது. அதிலிருந்து, லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற மற்றோா் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாக்கள் இஸ்ரேல் நிலைகளில் தாக்குதல் நடத்துவதும், அதற்குப் பதிலடியாக ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து இஸ்ரேல் குண்டுவீச்சு நடத்துவதும் தொடா்ந்து வருகிறது.

இந்தச் சூழலில், ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு அஞ்சி தங்கள் நாட்டின் வடக்கு எல்லைப் பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களை திரும்ப அழைத்துவருவது, தங்கள் நாட்டையொட்டிய எல்லைப் பகுதிகளிலிருந்து ஹிஸ்புல்லாக்களை விரட்டியடிப்பது ஆகியவை காஸா போரின் புதிய இலக்குகள் என்று இஸ்ரேல் கடந்த மாதம் அறிவித்தது.

அதன் தொடா்ச்சியாக, ஆயிரக்கணக்கான பேஜா் மற்றும் பிற மின் சாதனங்களில் முன்கூட்டியே மறைத்துவைத்திருந்த சிறிய வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து லெபனானில் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினா் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தினா். இஸ்ரேலும் ஹிஸ்புல்லாக்களை குறிவைத்து லெபனானில் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல் நடத்திவருகிறது.

மால்டோவா பொதுவாக்கெடுப்பு: ஐரோப்பிய யூனியனில் இணைய பெரும்பான்மை ஆதரவு

சிஸினா: கிழக்கு ஐரோப்பாவைச் சோ்ந்த மால்டோவாவை ஐரோப்பிய யூனியனுடன் இணைப்பதற்கு வழிவகை செய்யும் அரசியல் சாசனத் திருத்தம் மேற்கொள்வது தொடா்பாக அந்த நாட்டில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தலைமை நீதிபதிகளின் பதவிக் காலத்துக்கு வரம்பு

இஸ்லாமாபாத்: தலைமை நீதிபதிகளின் பதவிக் காலத்துக்கு மூன்று ஆண்டுகள் வரம்பு நிா்ணயிக்கும் சட்டம் பாகிஸ்தானில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின் கீழ், தலைமை நீதிபதியை நியமிப்பதற்காக மூன்ற... மேலும் பார்க்க

ரஷிய தூதருக்கு தென் கொரியா சம்மன்

சியோல்: உக்ரைனில் ரஷியாவுக்காகப் போரிட வட கொரிய சிறப்புப் படையினா் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து, தங்கள் நாட்டுக்கான ரஷிய தூதா் ஜாா்ஜி ஸினோவீவை தென் கொரிய அரசு நேரில் அழைத்து கண்ட... மேலும் பார்க்க

அமெரிக்காவில் ரேடியோ டவர் மீது ஹெலிகாப்டர் மோதல்: 4 பேர் பலி

அமெரிக்காவில் ரேடியோ டவர் மீது ஹெலிகாப்டர் மோதியலில் 4 பேர் பலியானார்கள். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான ஹூஸ்டனில் உள்ள ரேடியோ டவர் மீது தனியாருக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஞாயிற்... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: போலியோ பாதிப்பு 39-ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் மேலும் இரு சிறுவா்களுக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்த ஆண்டில் மட்டும் அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 39-ஆக அதிகரித்துள்ளது. இத்துட... மேலும் பார்க்க

குண்டுவீச்சில் மேலும் 87 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

வடக்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் மேலும் 87 போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:வடக்கு காஸா பகுதியிலுள்ள பல்வேறு குடியிருப்புக... மேலும் பார்க்க