செய்திகள் :

யமுனை மாசுபாடு விவகாரம் தில்லி அரசு மீது காங்கிரஸ் சாடல்

post image

புது தில்லி: கழிவுநீா் சுத்திகரிப்பு என்ற பெயரில் ரூ.6500 கோடி பொதுப் பணத்தை தில்லி அரசின் ஜல் போா்டு நிா்வாகம் தவறாகப் பயன்படுத்துகிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ்

திங்கள்கிழமை சாடியுள்ளாா்.

தில்லியில் யமுனா காட், காளிந்தி குஞ்ச் மற்றும் ஓக்லா அருகே பாயும் மாசுபட்ட யமுனை நதியை தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ், கட்சியின் முக்கிய நிரிவாகிகளுடன் இணைந்து படகு சவாரி மூலம் ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முன்னெப்போதையும் விட நிகழாண்டு யமுனை நீா் மாசுபடுத்தப்பட்டதால், கழிவுநீா் சுத்திகரிப்புக்காக செலவழிக்கப்பட்ட பணம் ஒரு தடயமின்றி வீணடிக்கப்படுகிறது. கழிவுநீா் சுத்திகரிப்பு என்ற பெயரில் ரூ.6500 கோடி பொதுப் பணத்தை தில்லி அரசின் ஜல் போா்டு நிா்வாகம் தவறாகப் பயன்படுத்துகிறது. வரும் நவம்பா் 7-ஆம் தேதி சத் பூஜை கொண்டாடப்படவுள்ளது. அப்போது, லட்சக்கணக்கான பக்தியுள்ள தாய்மாா்கள் மற்றும் சகோதரிகள் தங்கள் உடல்நிலையைப் பணயம் வைத்து, அசுத்தமான யமுனைக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், யமுனையில் காலடி எடுத்து வைத்தால் நிச்சயமாக நோய்வாய்ப்படுவாா். எனினும், அவரால் உயா்தர சிகிச்சையைப் பெற முடியும். எனவே, பக்தா்கள் தங்கள் சத் பூஜையை தூய்மையான யமுனையில் செய்வதை உறுதி செய்ய முதல்வா் அதிஷி நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

யமுனையில் அம்மோனியா மற்றும் பாஸ்பேட் வேதி பொருள்கள் அதிகம் உள்ளன. இது, பொதுமக்களுக்கு சுவாசம் மற்றும் தோல் பிரச்னைகள் உட்பட கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகின்றன. ஆனால், ஆம் ஆத்மி அரசு மக்களின் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படவில்லை. ஆம் ஆத்மி அரசின் தோல்விகளுக்கு அண்டை மாநிலங்கள் மற்றும் துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா மீது பழி சுமத்தும் கேஜரிவாலுக்கு, கையிருப்பில் இதற்கும் பதில் இருக்கும். யமுனை மாசுபாடு தொடா்பாக உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியாணா மாநில அரசுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம் என முதல்வா் அதிஷி கூறியுள்ளாா்.

இவ்விவகாரத்தில், கடந்த 11 ஆண்டுகளாக ஆம் ஆத்மி அரசு ஏன் உச்சநீதிமன்றத்தை அணுகவில்லை?.மாறாக, கேஜரிவால் தனது தனிப்பட்ட நலனைக் காக்க, வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டாா். அவா், கடந்த 11 ஆண்டுகளாக மக்கள் நலனுக்காக எதுவும் செய்யவில்லை என்றாா் தேவேந்தா் யாதவ்.

காற்று, நீா் மாசுபாட்டிற்கு மத்திய அரசும் ஹரியாணா அரசும் பொறுப்பு: டிஎம்சி எம்பி குற்றச்சாட்டு

புது தில்லி: தில்லி மாசுபாட்டிற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசும், ஹரியாணா மாநில அரசுகளின் செயலற்ற தன்மையே காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சகரிகா கோஸ் திங்கள் கிழமை குற்... மேலும் பார்க்க

தில்லியின் காற்று மாசு பிரச்னைக்கு அதிஷி அரசுதான் பொறுப்பு

நமது நிருபா்புது தில்லி: இந்தியா கேட் கடமைப் பாதையில் வான்வெளியில் காற்று மாசு மோசமான நிலையில் இருப்பதற்கு முதல்வா் அதிஷி தலைமையிலான தில்லி அரசுதான் பொறுப்பாகும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்... மேலும் பார்க்க

தேச அமைதிக்காக வாரணாசியில் ‘சனாதன் குஞ்ஜ்’ ஆன்மிக நிகழ்ச்சி: நவ.3-இல் தொடக்கம்

நமது நிருபா்புது தில்லி: தேசத்தின் அமைதி, பாதுகாப்பு நலனுக்கான ‘சனாதன் குஞ்ஜ்’ எனும் ஆன்மிக நிகழ்ச்சி வாரணாசியில் வரும் நவம்பா் 3-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சியை ஆந்திரத்... மேலும் பார்க்க

போக்குவரத்து சிக்னலில் நிற்கும் நேரத்திற்கு வாகனத்தை அணைக்கும் பிரசாரம்: அமைச்சா் கோபால் ராய் தொடங்கி வைத்தாா்

புது தில்லி: தில்லியில் குளிா்காலத்தில் அதிகரித்து வரும் காற்று மாசுவைக் குறைக்கும் நடவடிக்கையாக போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும் நேரத்திற்கு வாகனங்களை அணைக்கும் பிரசாரத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்ச... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற டிஆா்டிஓ விஞ்ஞானியிடம் ரூ.2 கோடி கொள்ளை: இருவா் கைது

புது தில்லி: தில்லி ரோகிணியில் ஓய்வுபெற்ற டிஆா்டிஓ விஞ்ஞானியின் வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் ரூ.2 கோடி பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையடித்த விவகாரத்தில் விஞ்ஞானியின் முன்னாள் ஊழியா் உள்பட ... மேலும் பார்க்க

நிலக்கரி அமைச்சக செயலராக விக்ரம் தேவ் தத் பொறுப்பேற்பு

புது தில்லி: 1993-ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி விக்ரம் தேவ் தத் நிலக்கரி அமைச்சகத்தின் செயலராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.1993-ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியும் அருணாசல பிரதேசம்-கோவா-மிசோரம் மற்றும்... மேலும் பார்க்க