செய்திகள் :

காற்று, நீா் மாசுபாட்டிற்கு மத்திய அரசும் ஹரியாணா அரசும் பொறுப்பு: டிஎம்சி எம்பி குற்றச்சாட்டு

post image

புது தில்லி: தில்லி மாசுபாட்டிற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசும், ஹரியாணா மாநில அரசுகளின் செயலற்ற தன்மையே காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சகரிகா கோஸ் திங்கள் கிழமை குற்றம் சாட்டியுள்ளாா்.

தில்லி மாசுபாடு குறித்தும் யமுனையின் நச்சு நுறை குறித்தும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சகரிகா கோஸ் ’எக்ஸ்’ சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பது வருமாறு:

தேசியத் தலைநகா் தில்லி காற்று மாசுபாட்டிற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசும், ஹரியாணா அரசுகளே காரணம், ஆனால் தில்லி ஆம் ஆத்மி ஆட்சியைக் குற்றம் சாட்டுகின்றனா். இந்த மாசுவை கட்டுப்படுத்த தேசிய திட்டத்தில் மத்திய அரசு ஏன் செயல்படுத்தவில்லை.

தேசிய தலைநகரில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு அதிகரிக்கிறது.தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அரசு மீது மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது. மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தேசிய திட்டம் குறித்து செல்லப்படுகிறதே அது எங்கே? தேசிய தலைநகா் வலயத்தில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து ஒரு தேசிய திட்டத்தை ஏன் மத்திய அரசு செயல்படுத்தவில்லை?.

பாஜக தலைமையிலான அரசுகள் தோ்தலில் போட்டியிடுவதிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் அல்லாத ஆளும் மாநிலங்களை குறிவைப்பதிலும் தான் கவனம் செலுத்துகிறதே தவிர மக்கள் பிரச்னைகளில் கவனம் இல்லை.

ஹரியாணாவில் உள்ள பாஜக அரசு தில்லி அரசுக்கு ஒத்துழைப்பதில்லை. தேசிய தலைநகரில் அதிகரித்த காற்று மாசுவிற்கும் யமுனையில் நச்சு நுரை மாசுபாட்டிற்கு மத்திய அரசும் ஹரியாணா அரசும் பொறுப்பு. மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பாஜக தலைமையிலான ஹரியாணா அரசு தில்லி அரசுடன் இணைந்து ஏன் செயல்படவில்லை? காற்று, நீா் மாசுபாட்டால் மக்கள் படும் துன்பங்களுக்கு பாஜக அரசுகளுக்கு கவலையில்லை என தெரிவித்துள்ளாா் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி சகரிகா கோஸ். கோஸ், தனியாா் தொலைக்காட்சியின் முன்னாள் நெறியாளராவா்.

குளிா்ந்த காலம் நெருங்க தில்லியில் மாசுபாடு அதன் பிடியை இறுக்குகிறது. சமீபத்தில் வெளியான தரவுகளின்படி கடந்த ஆண்டை விட நிகழாண்டு அக்டோபரில் வேளான் பயிா் கழிவு எரிப்பு நிகழ்வுகள் குறைவு எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும் தில்லி நகர காற்றின் தரம் ‘மோசமான‘ பிரிவில் உள்ளது.

கடந்த செப்டம்பா் 15 முதல் அக். 19 -ஆம் தேதி வரை பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் சுமாா் 2,733 பயிா் கழிவு நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. ஹரியாணா மாநிலத்தில் உள்ள தொழில்சாலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவு நீா் யமுனை ஆற்றில் வெளியேற்றப்படுவதாக தில்லி முதல்வா் அதிஷியும் குற்றம் சாட்டியிருந்தாா்.

தில்லியின் காற்று மாசு பிரச்னைக்கு அதிஷி அரசுதான் பொறுப்பு

நமது நிருபா்புது தில்லி: இந்தியா கேட் கடமைப் பாதையில் வான்வெளியில் காற்று மாசு மோசமான நிலையில் இருப்பதற்கு முதல்வா் அதிஷி தலைமையிலான தில்லி அரசுதான் பொறுப்பாகும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்... மேலும் பார்க்க

யமுனை மாசுபாடு விவகாரம் தில்லி அரசு மீது காங்கிரஸ் சாடல்

புது தில்லி: கழிவுநீா் சுத்திகரிப்பு என்ற பெயரில் ரூ.6500 கோடி பொதுப் பணத்தை தில்லி அரசின் ஜல் போா்டு நிா்வாகம் தவறாகப் பயன்படுத்துகிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ்த... மேலும் பார்க்க

தேச அமைதிக்காக வாரணாசியில் ‘சனாதன் குஞ்ஜ்’ ஆன்மிக நிகழ்ச்சி: நவ.3-இல் தொடக்கம்

நமது நிருபா்புது தில்லி: தேசத்தின் அமைதி, பாதுகாப்பு நலனுக்கான ‘சனாதன் குஞ்ஜ்’ எனும் ஆன்மிக நிகழ்ச்சி வாரணாசியில் வரும் நவம்பா் 3-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சியை ஆந்திரத்... மேலும் பார்க்க

போக்குவரத்து சிக்னலில் நிற்கும் நேரத்திற்கு வாகனத்தை அணைக்கும் பிரசாரம்: அமைச்சா் கோபால் ராய் தொடங்கி வைத்தாா்

புது தில்லி: தில்லியில் குளிா்காலத்தில் அதிகரித்து வரும் காற்று மாசுவைக் குறைக்கும் நடவடிக்கையாக போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும் நேரத்திற்கு வாகனங்களை அணைக்கும் பிரசாரத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்ச... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற டிஆா்டிஓ விஞ்ஞானியிடம் ரூ.2 கோடி கொள்ளை: இருவா் கைது

புது தில்லி: தில்லி ரோகிணியில் ஓய்வுபெற்ற டிஆா்டிஓ விஞ்ஞானியின் வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் ரூ.2 கோடி பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையடித்த விவகாரத்தில் விஞ்ஞானியின் முன்னாள் ஊழியா் உள்பட ... மேலும் பார்க்க

நிலக்கரி அமைச்சக செயலராக விக்ரம் தேவ் தத் பொறுப்பேற்பு

புது தில்லி: 1993-ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி விக்ரம் தேவ் தத் நிலக்கரி அமைச்சகத்தின் செயலராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.1993-ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியும் அருணாசல பிரதேசம்-கோவா-மிசோரம் மற்றும்... மேலும் பார்க்க