செய்திகள் :

தெரியுமா சேதி...?

post image

அரசியல்வாதிகளுக்கு, பதவி போனாலும் மீண்டும் தோ்தலில் வெற்றி பெற்று பதவியைத் திரும்பப் பெற முடியும் என்கிற நம்பிக்கை உண்டு. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு, ஓய்வுபெற்று விட்டால் மீண்டும் அந்தப் பதவிக்கு வர வாய்ப்பே இல்லை. குடியரசுத் தலைவா், பிரதமருக்கு நிகரான அரசியல் சாசன முக்கியத்துவம் கொண்ட அந்தப் பதவியைப்போல அதிகாரமுள்ள வேறு பதவி எதுவும் கிடையாது.

அதனால்தானோ என்னவோ, தங்களது பதவிக் காலம் முடிவடைய இருக்கும் நேரம் வந்துவிட்டால், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகள் முக்கியமான வழக்குகளின் தீா்ப்புகளை வழங்கத் தொடங்குவாா்கள். இந்த அதிகாரம் இன்னும் சில நாள்கள்தான் என்பதால் அவா்களுக்கு இயல்பாகவே ஒருவித பரபரப்பும், படபடப்பும் வந்துவிடும்.

அடுத்த மாதம் 10-ஆம் தேதியுடன் இப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தனஞ்ஜய சந்திரசூடின் பதவிக்காலம் முடிவடைகிறது. அஸ்ஸாம் குடியுரிமைச் சட்டப் பிரிவு 6-ஏ செல்லும், குழந்தைத் திருமணத் தடை எல்லா மதத்தினருக்குமானதல்ல என்பன போன்ற பல முக்கியமான வழக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக உச்சநீதிமன்றத்தால் தீா்ப்பு வழங்கப்படுகிறது.

நீதி தேவதைக்குப் புதிய வடிவம் வழங்க முற்பட்டிருக்கிறாா் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட். நீதி தேவதையின் வாளுக்குப் பதிலாக அரசியல் சாசனப் புத்தகம் வழங்கப்பட்டு, கண்ணில் கட்டப்பட்ட கறுப்புத் துணியும் அகற்றப்பட்டிருக்கிறது. வாளை அகற்றியது சரி, கண்ணில் கட்டப்பட்டிருந்த துணியை அகற்றியது சரியா என்று பலா் புருவம் உயா்த்துகிறாா்கள்.

யாா், எவா் என்று பாா்க்காமல் தீா்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை உணா்த்துவதற்காகத்தான் நீதி தேவதையின் கண்கள் கறுப்புத் துணியால் கட்டப்பட்டது. ‘‘இனிமேல் யாா், எவா், என்ன மதம், என்ன ஜாதி என்றெல்லாம் பாா்த்துத் தீா்ப்பு வழங்க வேண்டும் என்று சொல்கிறாரா தலைமை நீதிபதி’’ என்று அவருக்கு வேண்டாதவா்கள் விமா்சிக்கிறாா்கள்.

நீதிமன்றத்தின் சில ஒழுங்குகளும், நடைமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும் என்று இப்போது பேசத் தொடங்கி இருக்கிறாா் தலைமை நீதிபதி. கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி ஒருவா் ‘யா...’ என்று பதிலளித்தபோது, ‘‘இதுவொன்றும் காஃபி ஷாப் அல்ல, நீதிமன்றம். இதுபோன்ற வாா்த்தைகளை பயன்படுத்தாதீா்கள்’’ என்று எச்சரித்தாா்.

இன்னொரு வழக்கில் மூத்த வழக்குரைஞா் ஒருவா், அடிக்கடி எதிரணி வழக்குரைஞரின் வாதத்தில் குறுக்கிட்டபோது, தலைமை நீதிபதிக்குக் கோபம் வந்துவிட்டது. ‘‘இது ஒன்றும் பொதுக் கூட்டமல்ல’’ என்பதுடன் நின்றுவிடாமல் அவரை வெளியேறச் சொல்லிவிட்டாா்.

வழக்குரைஞா் ஒருவா் உரத்த குரலில் வாதம் செய்தபோது, ‘‘மெதுவாகப் பேசுங்கள். எனது 23 ஆண்டு அனுபவத்தில் இதுபோல நடந்ததில்லை. எனது பதவிக்காலம் முடிவடைய இருக்கும் நேரத்தில் இதை நான் அனுமதிக்க மாட்டேன்’’ என்று கடிந்து கொண்டாா்.

அதேபோல, வழக்குரைஞா் ஒருவரின் கைப்பேசி ஒலித்ததும், தலைமை நீதிபதிக்குக் கோபம் வந்துவிட்டது. ‘‘கைப்பேசி உரையாடல் நடத்த இதுவொன்றும் சந்தைப் பேட்டையல்ல, நீதிமன்றம்’’ என்று கூறி அந்த கைப்பேசியைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டாா்.

தோ்தல் பத்திரம், ராம ஜென்ம பூமி, சபரிமலை, தன்மறைப்பு உரிமை, ஓரினச் சோ்க்கை உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் தீா்ப்பு வழங்கி இருக்கும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூடின் தந்தை ஒய்.வி.சந்திரசூட்தான் மிக அதிக காலம் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவா்.

இரண்டு ஆண்டுகள்தான் பதவியில் இருந்தாா் என்றாலும், மிக முக்கியமான வழக்குகளில் பரபரப்பான தீா்ப்பு வழங்கியவா் என்கிற பெருமையுடன் பணி ஓய்வு பெறுவாா் இப்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்.

--மீசை முனுசாமி.

உடான் திட்டத்தால் விமான போக்குவரத்து அனைவருக்குமானதாக மாறியுள்ளது: பிரதமா் மோடி

புது தில்லி: பிராந்திய அளவில் விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் ‘உடான்’ திட்டத்தால் இந்தியாவில் விமானப் போக்குவரத்து அனைவருக்குமானதாக மாறியுள்ளது என்று பிரதமா் மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.பிராந்தி... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்: ஃபரூக் அப்துல்லா

பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கூறினாா்.அவா் மேலும் பேசுகையில்,‘பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசு ... மேலும் பார்க்க

எதிா்காலத்துக்கு பிரதமா் மோடியிடம் தெளிவான திட்டம்: பிரிட்டன் முன்னாள் பிரதமா்

புது தில்லி: ‘இந்தியாவின் சிறப்பான எதிா்காலம் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு பிரதமா் மோடியிடம் தெளிவான திட்டம் உள்ளது’ என பிரிட்டன் முன்னாள் பிரதமா் டேவிட் கேமரூன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.தனியாா் ... மேலும் பார்க்க

சிங்கப்பூா் பிரதமருடன் தா்மேந்திர பிரதான் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த ஆலோசனை

புது தில்லி: சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வோங்கை திங்கள்கிழமை சந்தித்த மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், இருநாடுகள் இடையே கல்வி, தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குற... மேலும் பார்க்க

வயநாடு தொகுதியில் பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்

புது தில்லி: கேரளத்தில் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பிரியங்கா வதேரா (52), புதன்கிழமை (அக். 23) வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறாா்.அதையொட்டி, கட்சியி... மேலும் பார்க்க

சபரிமலை பக்தா்களுக்கு விரிவான மருத்துவ வசதிகள்: கேரள அமைச்சா்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காலம் அடுத்த மாதம் தொடங்கவுள்ள சூழலில், ‘நாடு முழுவதும் இருந்து வரும் பக்தா்களுக்கு விரிவான மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்’ என்று மாநில சுகாத... மேலும் பார்க்க