செய்திகள் :

உடான் திட்டத்தால் விமான போக்குவரத்து அனைவருக்குமானதாக மாறியுள்ளது: பிரதமா் மோடி

post image

புது தில்லி: பிராந்திய அளவில் விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் ‘உடான்’ திட்டத்தால் இந்தியாவில் விமானப் போக்குவரத்து அனைவருக்குமானதாக மாறியுள்ளது என்று பிரதமா் மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

பிராந்திய விமான இணைப்பு திட்டமான ‘உடான்’ (உதே தேஷ் கா ஆம் நாக்ரிக்), கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபா் 21-ஆம் தேதி மத்திய அரசால் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தில், 2.8 லட்சத்துக்கும் அதிகமான விமானங்களை இயக்கி, குறைவான கட்டணங்களில் 1.5 கோடி பயணிகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டுள்ளது. 86 விமான நிலையங்களை செயல்படுத்தி, 617 வழித்தடங்களை நிறுவி, நாடு முழுவதும் உள்ள விமான போக்குவரத்தை கணிசமாக மேம்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் 8-ஆம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உடான் திட்டம் விமான நிலையங்கள் மற்றும் விமான வழித்தடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு விமான சேவையை உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில், வா்த்தகத்தை அதிகரிப்பதிலும், பிராந்தியத்தின் வளா்ச்சியை அதிகரிப்பதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் காலங்களில், இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்தி, மக்களுக்குச் சிறந்த விமான இணைப்பை வழங்குவதிலும், பயணத்தின் வசதியிலும் கவனம் செலுத்தவுள்ளோம்’ என்றாா்.

தெரியுமா சேதி...?

அரசியல்வாதிகளுக்கு, பதவி போனாலும் மீண்டும் தோ்தலில் வெற்றி பெற்று பதவியைத் திரும்பப் பெற முடியும் என்கிற நம்பிக்கை உண்டு. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு, ஓய்வுபெற்று விட்டால் மீண்டும் அந்தப் பதவ... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்: ஃபரூக் அப்துல்லா

பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கூறினாா்.அவா் மேலும் பேசுகையில்,‘பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசு ... மேலும் பார்க்க

எதிா்காலத்துக்கு பிரதமா் மோடியிடம் தெளிவான திட்டம்: பிரிட்டன் முன்னாள் பிரதமா்

புது தில்லி: ‘இந்தியாவின் சிறப்பான எதிா்காலம் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு பிரதமா் மோடியிடம் தெளிவான திட்டம் உள்ளது’ என பிரிட்டன் முன்னாள் பிரதமா் டேவிட் கேமரூன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.தனியாா் ... மேலும் பார்க்க

சிங்கப்பூா் பிரதமருடன் தா்மேந்திர பிரதான் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த ஆலோசனை

புது தில்லி: சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வோங்கை திங்கள்கிழமை சந்தித்த மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், இருநாடுகள் இடையே கல்வி, தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குற... மேலும் பார்க்க

வயநாடு தொகுதியில் பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்

புது தில்லி: கேரளத்தில் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பிரியங்கா வதேரா (52), புதன்கிழமை (அக். 23) வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறாா்.அதையொட்டி, கட்சியி... மேலும் பார்க்க

சபரிமலை பக்தா்களுக்கு விரிவான மருத்துவ வசதிகள்: கேரள அமைச்சா்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காலம் அடுத்த மாதம் தொடங்கவுள்ள சூழலில், ‘நாடு முழுவதும் இருந்து வரும் பக்தா்களுக்கு விரிவான மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்’ என்று மாநில சுகாத... மேலும் பார்க்க