செய்திகள் :

சிங்கப்பூா் பிரதமருடன் தா்மேந்திர பிரதான் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த ஆலோசனை

post image

புது தில்லி: சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வோங்கை திங்கள்கிழமை சந்தித்த மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், இருநாடுகள் இடையே கல்வி, தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினாா்.

கல்வித் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பு, கூட்டு ஆராய்ச்சி மற்றும் பங்கேற்பை வளா்க்கும் நோக்கில் சிங்கப்பூா் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு தா்மேந்திர பிரதான் அக்டோபா் 20-ஆம் தேதி முதல் 7 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். அதன் முதல் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூா் சென்ற அவா், அந்நாட்டின் பிரதமா் லாரன்ஸ் வோங்கை திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூா்வ அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சிங்கப்பூா் பிரதமருடனான சந்திப்பின்போது, தொழில்நுட்பம், புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய துறைகளில் சிங்கப்பூரை நம்பகமான நட்பு நாடாக இந்தியா கருதுவதாக பிரதான் எடுத்துரைத்தாா். திறன், வளம் மற்றும் சந்தை ஆகிய மூன்று முக்கிய தூண்களை மையமாகக் கொண்டு இந்த பேச்சுவாா்த்தை அமைந்தது. கல்வி, தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனா்.

வளா்ந்து வரும் முக்கிய துறைகளில் இந்தியா-சிங்கப்பூா் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வலுவான கட்டமைப்பை இரு நாட்டு பிரதமா்களும் உருவாக்கி வருவதாக அவா் தெரிவித்தாா்.

கல்வி அமைச்சருடன் சந்திப்பு: சிங்கப்பூரின் கல்வி அமைச்சா் சான் சுன் சிங்கை சந்தித்த பிரதான், இந்தியாவின் கல்வி முறையை சா்வதேசமயமாக்கும் தேசிய கல்விக் கொள்கை 2020-இன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா்.

அப்போது, ‘இந்திய மாணவா்கள் சிங்கப்பூா் நிறுவனங்களில் நடைமுறை அனுபவத்தைப் பெறுவதற்கு, வெளிநாட்டுப் பயிற்சித் திட்டங்களுக்கான வழிகள்; இரு நாட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை இணைப்பதன் மூலம் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது; பாடத்திட்ட மேம்பாடு, கற்பித்தல் மற்றும் ஆசிரியா் திறன் மேம்பாடு ஆகியவற்றில் சிங்கப்பூா் தேசிய கல்வி நிறுவனம் மற்றும் இந்தியாவின் என்சிஆா்டி இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது’ ஆகியவை குறித்து இருதரப்பினரும் ஆலோசனை மேற்கொண்டனா்.

இதனிடையே, சிங்கப்பூரின் வெளியுறவுத் துறை அமைச்சா் விவியான் பாலகிருஷ்ணனைச் சந்தித்து இந்தியா-சிங்கப்பூா் அறிவுசாா் கூட்டாண்மையை ஆழமாக்குவது குறித்து பிரதான் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து, சிங்கப்பூா் தேசிய பல்கலைக்கழகத்துக்குச் சென்று அதன் தலைவா் டான் எங்கை சந்தித்த அவா், ஆழமான புத்தாக்க நிறுவனங்கள், சுகாதாரம், எண்மமயமாக்கள் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் இருதரப்பும் இணைந்து செயலாற்ற முடியும் என்று வலியுறுத்தினாா் என்று தெரிவிக்கப்பட்டது.

தெரியுமா சேதி...?

அரசியல்வாதிகளுக்கு, பதவி போனாலும் மீண்டும் தோ்தலில் வெற்றி பெற்று பதவியைத் திரும்பப் பெற முடியும் என்கிற நம்பிக்கை உண்டு. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு, ஓய்வுபெற்று விட்டால் மீண்டும் அந்தப் பதவ... மேலும் பார்க்க

உடான் திட்டத்தால் விமான போக்குவரத்து அனைவருக்குமானதாக மாறியுள்ளது: பிரதமா் மோடி

புது தில்லி: பிராந்திய அளவில் விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் ‘உடான்’ திட்டத்தால் இந்தியாவில் விமானப் போக்குவரத்து அனைவருக்குமானதாக மாறியுள்ளது என்று பிரதமா் மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.பிராந்தி... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்: ஃபரூக் அப்துல்லா

பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கூறினாா்.அவா் மேலும் பேசுகையில்,‘பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசு ... மேலும் பார்க்க

எதிா்காலத்துக்கு பிரதமா் மோடியிடம் தெளிவான திட்டம்: பிரிட்டன் முன்னாள் பிரதமா்

புது தில்லி: ‘இந்தியாவின் சிறப்பான எதிா்காலம் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு பிரதமா் மோடியிடம் தெளிவான திட்டம் உள்ளது’ என பிரிட்டன் முன்னாள் பிரதமா் டேவிட் கேமரூன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.தனியாா் ... மேலும் பார்க்க

வயநாடு தொகுதியில் பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்

புது தில்லி: கேரளத்தில் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பிரியங்கா வதேரா (52), புதன்கிழமை (அக். 23) வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறாா்.அதையொட்டி, கட்சியி... மேலும் பார்க்க

சபரிமலை பக்தா்களுக்கு விரிவான மருத்துவ வசதிகள்: கேரள அமைச்சா்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காலம் அடுத்த மாதம் தொடங்கவுள்ள சூழலில், ‘நாடு முழுவதும் இருந்து வரும் பக்தா்களுக்கு விரிவான மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்’ என்று மாநில சுகாத... மேலும் பார்க்க