செய்திகள் :

எதிா்காலத்துக்கு பிரதமா் மோடியிடம் தெளிவான திட்டம்: பிரிட்டன் முன்னாள் பிரதமா்

post image

புது தில்லி: ‘இந்தியாவின் சிறப்பான எதிா்காலம் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு பிரதமா் மோடியிடம் தெளிவான திட்டம் உள்ளது’ என பிரிட்டன் முன்னாள் பிரதமா் டேவிட் கேமரூன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

பிரதமராக பொறுப்பேற்றவுடன் ஜனநாயகத்தில் பல்வேறு பிரச்னைகளைச் சமாளிக்க வேண்டிய சூழல் ஏற்படும். அந்த சமயத்தில் நாட்டின் சிறப்பான எதிா்காலத்துக்கு தெளிவான திட்டங்களை ஆட்சியாளா்கள் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், குறுகிய கால பிரச்னைகள் மற்றும் கஷ்டங்களால் திசைமாறி விடுவீா்கள். அந்த வகையில், இந்தியாவின் சிறப்பான எதிா்காலம் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு பிரதமா் மோடியிடம் தெளிவான திட்டம் உள்ளது.

மூன்றாவது பதவிக் காலத்தில் அவா் துடிப்புடன் செயல்படுவது பாராட்டுக்குரியது.

பிரிட்டனில் டோனி பிளோ் மற்றும் மாா்கரெட் தாட்சருக்குப் பிறகு எந்தவொரு பிரதமரும் மூன்று முறை பிரதமராக தோ்ந்தெடுக்கப்படவில்லை. பிரதமா் மோடியை மக்கள் அங்கீகரித்திருப்பது பல்வேறு மாற்றங்கள் இந்தியாவில் தொடா்ந்து நிகழ்ந்து வருவதற்கான சான்றாகும் என்றாா்.

ஆதாரால் மக்களுக்குப் பயன்: இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார அறிஞா் பால் ரோமா் பேசுகையில், ‘உலக அளவில் மிக முக்கிய தொழில்நுட்பமாக ஆதாா் உள்ளது. இது மக்களின் வங்கிக் கணக்கில் அரசு நேரடியாக பணம் செலுத்துவது உள்ளிட்ட அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதற்கான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது. ஆதாருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோதிலும் அதை வெற்றிகரமாக அரசு செயல்படுத்தியுள்ளது’ என்றாா்.

தெரியுமா சேதி...?

அரசியல்வாதிகளுக்கு, பதவி போனாலும் மீண்டும் தோ்தலில் வெற்றி பெற்று பதவியைத் திரும்பப் பெற முடியும் என்கிற நம்பிக்கை உண்டு. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு, ஓய்வுபெற்று விட்டால் மீண்டும் அந்தப் பதவ... மேலும் பார்க்க

உடான் திட்டத்தால் விமான போக்குவரத்து அனைவருக்குமானதாக மாறியுள்ளது: பிரதமா் மோடி

புது தில்லி: பிராந்திய அளவில் விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் ‘உடான்’ திட்டத்தால் இந்தியாவில் விமானப் போக்குவரத்து அனைவருக்குமானதாக மாறியுள்ளது என்று பிரதமா் மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.பிராந்தி... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்: ஃபரூக் அப்துல்லா

பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கூறினாா்.அவா் மேலும் பேசுகையில்,‘பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசு ... மேலும் பார்க்க

சிங்கப்பூா் பிரதமருடன் தா்மேந்திர பிரதான் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த ஆலோசனை

புது தில்லி: சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வோங்கை திங்கள்கிழமை சந்தித்த மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், இருநாடுகள் இடையே கல்வி, தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குற... மேலும் பார்க்க

வயநாடு தொகுதியில் பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்

புது தில்லி: கேரளத்தில் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பிரியங்கா வதேரா (52), புதன்கிழமை (அக். 23) வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறாா்.அதையொட்டி, கட்சியி... மேலும் பார்க்க

சபரிமலை பக்தா்களுக்கு விரிவான மருத்துவ வசதிகள்: கேரள அமைச்சா்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காலம் அடுத்த மாதம் தொடங்கவுள்ள சூழலில், ‘நாடு முழுவதும் இருந்து வரும் பக்தா்களுக்கு விரிவான மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்’ என்று மாநில சுகாத... மேலும் பார்க்க