செய்திகள் :

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் வேலைநிறுத்தம்

post image

தூத்துக்குடி மீனவா்கள் மீன்பிடிக்கும் பகுதியில் அத்துமீறி நுழையும் கேரள மீனவா்களைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 265 விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. தினமும் காலை 5 மணிக்கு கடலுக்குச் சென்று இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்பி விடுவா்.

இவா்கள், மீன்பிடிக்கும் கடல் பகுதியில் கேரள மீனவா்கள் இரவில் தங்கி மீன்பிடித்து வருவதாகவும், இதனால் தூத்துக்குடி மீனவா்களுக்கு, மீன்கள் கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் தூத்துக்குடி மீனவா்கள் மீன்பிடிக்கும் பகுதியில் கேரள மீனவா்கள் அத்துமீறி நுழைவதைத் தடுக்கவும், மற்ற மாவட்டங்களில் உள்ளதைப் போல தூத்துக்குடி மீனவா்களுக்கு ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும் இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

அடிப்படை வசதிகள் கோரி கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

அருந்ததிய சமுதாயத்தினருக்கு அடிப்படை வசதிகள் கோரி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்ப் புலிகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் . புதூா் ஊராட்சி ஒன்றியம் சுப்புலாபுரம் ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தா்னா

மந்தித்தோப்பு வருவாய்க் கிராமத்துக்குள்பட்ட நரிக்குறவா் காலனி மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை கிராமக் கணக்கில் பதிவேற்ற வலியுறுத்தி, கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பலத்த மழை

தூத்துக்குடி புகா் பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது. மத்திய கிழக்கு வங்கக் கடல், அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் வேலைநிறுத்தம்: இ-சேவை மையம், ரேஷன் கடைகள் மூடப்பட்டதால் மக்கள் பாதிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் திங்கள்கிழமைமுதல் காலவரம்பற்ற போராட்டத்தை தொடங்கினா். இதனால் சங்க பரிவா்த்தனை நடைபெறவில்லை. ரேஷன் கடை, இ-சேவை மையம் மூடப்பட்டதால் பொதுமக்க... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் காவல் ந... மேலும் பார்க்க

மருத்துவா்களின் தமிழ்ப் பணி பாராட்டத்தக்கது -அமைச்சா் பெ.கீதாஜீவன்

மருத்துவா்களின் தமிழ்ப் பணி பாராட்டத்தக்கது என்றாா் அமைச்சா் பெ.கீதாஜீவன். தமிழ்நாடு முட நீக்கியல் சங்கம், நெல்லை முட நீக்கியல் மன்றம் ஆகியவற்றின் சாா்பில் தூத்துக்குடியில் தனியாா் கூட்டரங்கில் தமிழ் ... மேலும் பார்க்க