செய்திகள் :

`ஜாமீன் கிடையாது' - பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

post image

பாலியல் வழக்கில் சிக்கிய மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் கோரிக்கையை கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. முன்னதாக, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் சமயத்தில் பிரஜ்வல் தொடர்பான 2,900-க்கும் மேற்பட்ட பாலியல் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தின.

பிரஜ்வல் ரேவண்ணா

அதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைக்க, பிரஜ்வல் மீது பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமைகள் புகார்கள் குவிந்தன. இதற்கிடையில், கர்நாடகாவில் வாக்குப்பதிவு முடிந்த வெளிநாட்டுக்குத் தப்பினார். பின்னர், மே 31-ம் தேதி நாடு திரும்பிய அன்றே போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, பிரஜ்வல் மீது மூன்று பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகைகளை சிறப்பு விசாரணைக் குழு தாக்கல் செய்தது.

அதில், ஆகஸ்ட் 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், பிரஜ்வல் வீட்டில் சமையல் வேலை பார்த்துவந்த பெண்ணையும், அவரின் மகளையும் பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அதையடுத்து, செப்டம்பர் 9-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது குற்றப்பத்திரிகையில், தனது பண்ணை வீட்டில் பணிபுரிந்துவந்த பெண்ணை பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. செப்டம்பர் 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், தனது தொகுதியின் பெண் பஞ்சாயத்து உறுப்பினரை மூன்று ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரஜ்வல் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கர்நாடக உயர் நீதிமன்றம்

மேலும், நிலுவையிலிருக்கும் நான்காவது வழக்கில் பல பெண்கள் பிரஜ்வல் மீது பாலியல் புகாரளித்திருக்கின்றனர். இதனால், தன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்குகளிலிருந்தும் ஜாமீன் வழங்கக் கோரி மாநில உயர் நீதிமன்றத்தில் பிரஜ்வல் தனித்தனி மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் விசாரித்த நீதிபதி எம்.நாகபிரசன்னா தலைமையிலான அமர்வு, செப்டம்பர் 19-ம் தேதியன்று தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில், உயர் நீதிமன்றம் இன்று பிரஜ்வலின் ஜாமீன் கோரிக்கையை இன்று நிராகரித்து மனுக்களைத் தள்ளுபடி செய்திருக்கிறது.

ஹைதராபாத்: மதுபானக் கூடத்தில் ஆபாச நடனம்... பார்ட்டி - 40 இளம்பெண்கள் உட்பட 140 பேர் கைது!

ஹைதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள மதுபானக் கூடத்தில் ஆபாச நடனமாடிய பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 40 இளம்பெண்கள் உள்பட மதுபோதையில் திளைத்த 140 பேரை பஞ்சாரா ஹில்ஸ் போலீஸார் கைது செய்து, மதுபானக் க... மேலும் பார்க்க

``ஓவர் போதையில் இருந்ததால்..." - போலீசை மிரட்டிய வைரல் நபர்கள்; மன்னிப்புக் கேட்கும் வீடியோ

சென்னை மெரினா லூப் சாலையில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவரும் இன்று மன்னிப்புக் கேட்கும் வீடியோவை வெளியிட்டுள்ளனர் சென்னைக் காவல்துறையினர்.`உதயநிதியைக் கூப்பிடுவேன்..!' - மெரினாவில் வ... மேலும் பார்க்க

`உதயநிதியைக் கூப்பிடுவேன்..!' - மெரினாவில் வாக்குவாதம் செய்த நபர்... போலீஸ் விசாரணை!

சென்னையில் நள்ளிரவு நேரத்தில் போலீஸார் ரோந்து பணி, வாகனச் சோதனையில் ஈடுபடுவது உண்டு. சம்பவத்தன்று போலீஸார், மெரினா சர்வீஸ் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்தச் சாலையில் ... மேலும் பார்க்க

டேட்டிங் ஆப்பில் சிக்கும் இளைஞர்களிடம் பணம் பறிக்கும் மோசடி கும்பல்... விசாரணையில் அம்பலம்!

டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகி திருமணம் செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகும் பெண்களிடம் மோசடி செய்வது போன்ற சம்பவங்களும் நடக்கிறது. ஆனால் மும... மேலும் பார்க்க

மனநலம் பாதித்த பெண்ணிடம் பாலியல் சீண்டல்; கிராம மக்களிடம் சிக்கிய மின் வாரிய ஊழியர் கைது!

ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வாய் பேச முடியாத மனநலம் பாதிக்கப்பட்டவர். அப்பகுதியை சேர்ந்த தம்பதியினர் அந்த பெண்ணை தத்து எடுத்து வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் வளர்ப்பு... மேலும் பார்க்க

ஒரே நாளில் 32 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்... 17 வயது சிறுவன் கைது! - நடந்தது என்ன?

கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 32 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை செயல்பட்டுவரும் நிலையில், இந்த வ... மேலும் பார்க்க