செய்திகள் :

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல்: காங்.,தேர்தல் குழு ஆலோசனை!

post image

மகாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று (அக். 21) ஆலோசனை மேற்கொண்டது.

மகாராஷ்டிரத்துக்கு நவ. 20ஆம் தேதி ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு நவ. 13, 20 என இரு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனைக் கட்சி (உத்தவ் பிரிவு) மகா விகாஸ் அகாதி கூட்டணி முயற்சிக்கிறது.

இந்நிலையில், காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டது. தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, எம்.பி., ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதையும் படிக்க | ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!

பேரவைத் தேர்தல்

81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிர மாநிலத்துக்கு நவம்பர் 20ஆம் தேதி ஒரு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நவ. 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதல் கட்டமாக 99 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

கொல்கத்தா: மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தங்களின் கோரிக்கைகளை மேற்கு வங்க அரசு நிறைவேற்ற தவறியதாக கூறி பயிற்சி மருத்துவா்கள் கொல்கத்தாவில் கடந்த அக். 5-ஆம் தேதி மாலை முதல் காலவரைய... மேலும் பார்க்க

லடாக் ஆதரவாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக லடாக் ஆதரவாளர்களுடன் புதுதில்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த லடாக்கைச் சேர்ந்த பருவநிலை செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக், உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக அறிவ... மேலும் பார்க்க

பெண் போலீஸ் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட கொடூரம்!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுழலில், சுமங்கலி விரத தினமான ‘கர்வா சௌத்’ விரதம் கடைப்பிடிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை (அக். 20), உத்தரப் பிரதேசத்தில் பெண் காவ... மேலும் பார்க்க

மமதாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய மருத்துவக் குழு!

கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் முதல்வர் மமதா பானர்ஜி இன்று (அக். 21) பேச்சுவார்த்தை நடத்தினார். மாலை 5 மணிக்குத் தொடங்கி சுமார் இரண்டு மணிநேரத்துக்கு இந்த பேச்சுவார்த்தை நடைப... மேலும் பார்க்க

ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!

போன்பே நிறுவனத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் பயன்பாட்டால் கடந்த 5 ஆண்டுகளில் 60 சதவிகித ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ்(ஏ.ஐ.) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்... மேலும் பார்க்க

பிரதமர் கல்வித்தகுதி வழக்கு: கேஜரிவாலின் மனு தள்ளுபடி!

பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பான அவதூறு வழக்கில் கேஜரிவால் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரதமரின் கல்வித் தகுதி குறிதது ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர... மேலும் பார்க்க