செய்திகள் :

பிரதமர் கல்வித்தகுதி வழக்கு: கேஜரிவாலின் மனு தள்ளுபடி!

post image

பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பான அவதூறு வழக்கில் கேஜரிவால் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பிரதமரின் கல்வித் தகுதி குறிதது ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான கேஜரிவால் விமர்சித்து பேசியிருந்தார். இதுதொடர்பாக குஜராத் பல்கலைக்கழகம் கேஜரிவாலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணைக்காக கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி நிர்வாகி சஞ்சய் சங் ஆகியோர் நேரில் ஆஜராக விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சம்மனை எதிர்த்து கேஜரிவால் தரப்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த குஜராத் நீதிமன்றம், கேஜரிவாலின் மனுவை பிப்ரவரி 16ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ததோடு, கேஜரிவாலின் மேல் முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது. இதேவழக்கில் சஞ்சய் சிங் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் ஒரேமாதிரியான அணுகுமுறையை நாங்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறிய உச்ச நீதிமன்றம் கேஜரிவாலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கொல்கத்தா: மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தங்களின் கோரிக்கைகளை மேற்கு வங்க அரசு நிறைவேற்ற தவறியதாக கூறி பயிற்சி மருத்துவா்கள் கொல்கத்தாவில் கடந்த அக். 5-ஆம் தேதி மாலை முதல் காலவரைய... மேலும் பார்க்க

லடாக் ஆதரவாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக லடாக் ஆதரவாளர்களுடன் புதுதில்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த லடாக்கைச் சேர்ந்த பருவநிலை செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக், உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக அறிவ... மேலும் பார்க்க

பெண் போலீஸ் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட கொடூரம்!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுழலில், சுமங்கலி விரத தினமான ‘கர்வா சௌத்’ விரதம் கடைப்பிடிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை (அக். 20), உத்தரப் பிரதேசத்தில் பெண் காவ... மேலும் பார்க்க

மமதாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய மருத்துவக் குழு!

கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் முதல்வர் மமதா பானர்ஜி இன்று (அக். 21) பேச்சுவார்த்தை நடத்தினார். மாலை 5 மணிக்குத் தொடங்கி சுமார் இரண்டு மணிநேரத்துக்கு இந்த பேச்சுவார்த்தை நடைப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல்: காங்.,தேர்தல் குழு ஆலோசனை!

மகாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று (அக். 21) ஆலோசனை மேற்கொண்டது.மகாராஷ்டிரத்துக்கு நவ. 20ஆம் தேதி ஒரே கட்டமாக... மேலும் பார்க்க

ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!

போன்பே நிறுவனத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் பயன்பாட்டால் கடந்த 5 ஆண்டுகளில் 60 சதவிகித ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ்(ஏ.ஐ.) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்... மேலும் பார்க்க