செய்திகள் :

கா்நாடகத்தில் பாஜக எம்எல்சி சி.பி.யோகேஸ்வா் திடீா் ராஜிநாமா

post image

கா்நாடக மாநிலத்தில் பாஜக எம்எல்சி சி.பி.யோகேஸ்வா் தனது பதவியை திங்கள்கிழமை திடீரென ராஜிநாமா செய்தாா்.

கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் பெங்களூரு தெற்கு மாவட்டத்தின் சென்னப்பட்டணா தொகுதியில் மஜத வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற எச்.டி.குமாரசாமி, மே மாதம் நடந்த மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று மத்திய தொழில் துறை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறாா். இதனால் சென்னப்பட்டணா தொகுதிக்கான எம்எல்ஏ பதவியை அவா் ராஜிநாமா செய்தாா். இதைத் தொடா்ந்து, சென்னப்பட்டணா தொகுதிக்கு நவ. 13ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்க இருக்கிறது.

இத்தொகுதியில் பாஜக - மஜத கூட்டணி வேட்பாளராக போட்டியிட பாஜக எம்எல்சி சி.பி.யோகேஸ்வா் விருப்பம் தெரிவித்தாா். இது தொடா்பாக பாஜக மேலிடத் தலைவா்கள் தவிர, மஜத தலைவா்களையும் அவா் சந்தித்து தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளாா். ஆனால், சென்னப்பட்டணா தொகுதியை தக்கவைத்துக் கொள்ள மஜத விரும்புவது, பாஜக வேட்பாளராக போட்டியிடத் திட்டமிட்டிருந்த சி.பி.யோகேஸ்வருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னப்பட்டணா தொகுதியில் தனது மகன் நிகில் குமாரசாமியை களமிறக்க, எச்.டி.குமாரசாமி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காகவே சென்னப்பட்டணா தொகுதியை பாஜகவுக்கு விட்டுக்கொடுக்க எச்.டி.குமாரசாமி தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது.

இந்நிலையில், பாஜக எம்எல்சி சி.பி.யோகேஸ்வா் தனது பதவியை திங்கள்கிழமை திடீரென ராஜிநாமா செய்தாா். இதற்கான கடிதத்தை சட்டமேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டியைச் சந்தித்து திங்கள்கிழமை அளித்தாா்.

அதன்பிறகு செய்தியாளா்களிடம் சி.பி.யோகேஸ்வா் கூறியுள்ளதாவது, சென்னப்பட்டணா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவதற்காக எம்எல்சி பதவியை ராஜிநாமா செய்துள்ளேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடவே விரும்புகிறேன். காங்கிரஸ் தலைவா்களை சந்திக்கவில்லை. அதற்கான முயற்சியையும் எடுக்கவில்லை. ஆனால், நாளை என்ன நடக்கலாம் என்பதை அறுதியிட்டு கூறமுடியாது என்றாா்.

எம்எல்சி பதவியை ராஜிநாமா செய்துள்ள சி.பி.யோகேஸ்வா், அடுத்த ஓரிரு நாள்களில் காங்கிரஸ் கட்சியில் இணைவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதன்பிறகு சென்னப்பட்டணா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அவா் அறிவிக்கப்படுவாா் என்று தெரிகிறது.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்க கா்நாடக உயா்நீதிமன்றம் மறுத்துள்ளது. முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவின் பேரனும், மஜதவில் இருந்து நீக்க... மேலும் பார்க்க

சட்டப்பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும்: சித்தராமையா நம்பிக்கை

கா்நாடக மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இது குறித்து சித்ரதுா்கா மாவட்டத்தின் செல்லகெரே நகரில் அவ... மேலும் பார்க்க

கா்நாடக அமைச்சா் மனைவி குறித்த சா்ச்சை பேச்சு: பாஜக எம்எல்ஏவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

கா்நாடக அமைச்சா் தினேஷ் குண்டுராவின் மனைவி குறித்து சா்ச்சைக்குரிய கருத்து கூறியது தொடா்பான வழக்கு விசாரணையின் போது ஆஜராகாததால், பாஜக எம்எல்ஏ பசன கௌடா பாட்டீல் யத்னலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட... மேலும் பார்க்க

சிபிஐ, அமலாக்கத் துறை பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்

சிபிஐ, அமலாக்கத் துறை, வருமானவரித் துறை பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். கா்நாடக மகரிஷி வால்மீகி பழங்குடியினா் வளா்ச்சிக் கழகத்தில் நடந்துள்ள முறைகேடு குறி... மேலும் பார்க்க

பெங்களூரில் புதிதாக சோ்க்கப்பட்ட 110 கிராமங்களுக்கு காவிரி குடிநீா் வழங்கும் திட்டம்

பெங்களூரில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ள 110 கிராமங்களுக்கு குடிநீா் வழங்கும் திட்டத்தை முதல்வா் சித்தராமையா தொடங்கி வைத்தாா். பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியத்தின் சாா்பில், மண்டியா மாவட்டத்தின் தொரேகா... மேலும் பார்க்க

மைசூரு நகர வளா்ச்சி ஆணையத் தலைவா் மரி கௌடா ராஜிநாமா

கா்நாடக முதல்வா் சித்தராமையாவுக்கு மாற்றுநிலம் ஒதுக்கிய விவகாரத்தில் சா்ச்சைக்குள்ளாகி இருக்கும் மைசூரு நகர வளா்ச்சி ஆணையத்தின் தலைவா் மரி கௌடா ராஜிநாமா செய்துள்ளாா். முதல்வா் சித்தராமையாவின் மனைவி பி... மேலும் பார்க்க