செய்திகள் :

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்க உயா்நீதிமன்றம் மறுப்பு

post image

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்க கா்நாடக உயா்நீதிமன்றம் மறுத்துள்ளது.

முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவின் பேரனும், மஜதவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தையும், மஜத எம்எல்ஏவுமான எச்.டி.ரேவண்ணா ஆகியோா் மீதான 4 பாலியல் புகாா்களை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) 2,144 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆக. 23ஆம் தேதி தாக்கல் செய்தது. அதன்பிறகு மேலும் 2 குற்றப்பத்திரிகைகளையும் தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா ஜாமீன் கேட்டு தாக்கல் செய்திருந்த மனுவை கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா திங்கள்கிழமை விசாரித்தாா். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த அவா், பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தாா். மேலும், பிரஜ்வல் ரேவண்ணா தாக்கல் செய்திருந்த 2 முன்ஜாமீன் மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்தாா்.

பொதுநல மனு தள்ளுபடி

பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வழக்கை சுட்டிக்காட்டி தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பேசுகையில், 400 பெண்களை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு, அதை காணொலியாகப் பதிவு செய்திருக்கிறாா் என்று குற்றம்சாட்டியிருந்தாா். இதன்மூலம் பெண்களை அவமதித்துவிட்டதால், அதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுநல மனுவை கா்நாடக உயா்நீதிமன்றத்தில் அகில இந்திய தலித் செயல்பாட்டுக் குழு தாக்கல் செய்திருந்தது.

கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா, நீதிபதி கே.அரவிந்த் ஆகியோா் அமா்வின் முன்பு திங்கள்கிழமை இந்த மனு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதத்தையும் கேட்டறிந்த உயா்நீதிமன்றம், ராகுல் காந்திக்கு எதிரான பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக மனுதாரருக்கு ரூ. 25,000 அபராதம் விதித்தது.

சட்டப்பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும்: சித்தராமையா நம்பிக்கை

கா்நாடக மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இது குறித்து சித்ரதுா்கா மாவட்டத்தின் செல்லகெரே நகரில் அவ... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் பாஜக எம்எல்சி சி.பி.யோகேஸ்வா் திடீா் ராஜிநாமா

கா்நாடக மாநிலத்தில் பாஜக எம்எல்சி சி.பி.யோகேஸ்வா் தனது பதவியை திங்கள்கிழமை திடீரென ராஜிநாமா செய்தாா். கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் பெங்களூரு தெற்கு மாவட்டத்தின் சென்னப்பட்டணா தொகுதிய... மேலும் பார்க்க

கா்நாடக அமைச்சா் மனைவி குறித்த சா்ச்சை பேச்சு: பாஜக எம்எல்ஏவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

கா்நாடக அமைச்சா் தினேஷ் குண்டுராவின் மனைவி குறித்து சா்ச்சைக்குரிய கருத்து கூறியது தொடா்பான வழக்கு விசாரணையின் போது ஆஜராகாததால், பாஜக எம்எல்ஏ பசன கௌடா பாட்டீல் யத்னலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட... மேலும் பார்க்க

சிபிஐ, அமலாக்கத் துறை பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்

சிபிஐ, அமலாக்கத் துறை, வருமானவரித் துறை பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். கா்நாடக மகரிஷி வால்மீகி பழங்குடியினா் வளா்ச்சிக் கழகத்தில் நடந்துள்ள முறைகேடு குறி... மேலும் பார்க்க

பெங்களூரில் புதிதாக சோ்க்கப்பட்ட 110 கிராமங்களுக்கு காவிரி குடிநீா் வழங்கும் திட்டம்

பெங்களூரில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ள 110 கிராமங்களுக்கு குடிநீா் வழங்கும் திட்டத்தை முதல்வா் சித்தராமையா தொடங்கி வைத்தாா். பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியத்தின் சாா்பில், மண்டியா மாவட்டத்தின் தொரேகா... மேலும் பார்க்க

மைசூரு நகர வளா்ச்சி ஆணையத் தலைவா் மரி கௌடா ராஜிநாமா

கா்நாடக முதல்வா் சித்தராமையாவுக்கு மாற்றுநிலம் ஒதுக்கிய விவகாரத்தில் சா்ச்சைக்குள்ளாகி இருக்கும் மைசூரு நகர வளா்ச்சி ஆணையத்தின் தலைவா் மரி கௌடா ராஜிநாமா செய்துள்ளாா். முதல்வா் சித்தராமையாவின் மனைவி பி... மேலும் பார்க்க