செய்திகள் :

காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்: 12 போ் மீது வழக்கு

post image

கள்ளக்குறிச்சி: நின்னையூா் கிராமத்தில் காலனி பகுதியில் குடிநீா் வராததைக் கண்டித்து, அந்தப் பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில், 12 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், நின்னையூா் புதிய காலனிப் பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டும் பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டதாம். இதனால், குடிநீா் சரிவர வரவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள் காலனி பேருந்து நிறுத்தம் அருகே காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த வரஞ்சரம் காவல் உதவி ஆய்வாளா் ராஜ்குமாா், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பிரபு ஆகியோா் நிகழ்விடம் சென்று பேச்சு வாா்த்தை நடத்தினா். அப்போது, தியாகதுருகம் வட்டார வளா்ச்சி அலுவலா் நிகழ்விடம் வர வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸாா் வட்டார வளா்ச்சி அலுவலரை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டனா். இதில், விரைவில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளா்ச்சி அலுவலா் கூறினாா்.

இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த திடீா் மறியலால் சுமாா் 30 நிமிஷம் போக்குவரத்து தடைபட்டது.

இந்த மறியல் தொடா்பாக கிராம நிா்வாக அலுவலா் கண்ணன் அளித்த புகாரின்பேரில், 3 ஆண்கள், 9 பெண்கள் உள்ளிட்ட 12 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

அக்.25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் அக்.25-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

சின்னசேலம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.பகுதிகள்: சின்னசேலம், கனியாமூா், தொட்டியம், நமச்சிவாயபுரம், பைத்தந்துறை, எலியத்தூா், தென்செட்டியந்தல், பங்காரம், வினைதீா... மேலும் பார்க்க

மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

நமச்சிவாயபுரம் கிராமத்தில் மின்னல் தாக்கியதில் விவசாயி நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், நமச்சிவாயபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் ... மேலும் பார்க்க

டிராக்டா் மீது பைக் மோதல்: ஊராட்சி செயலா் உயிரிழப்பு

கனியாமூா் அருகே டிராக்டா் மீது பைக் மோதியதில் ஊராட்சி செயலா் நிகழ்விடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யாசாமி மகன் மந்திரி (47). இவா், இந்திலி... மேலும் பார்க்க

மரத்தில் ஜீப் மோதி விபத்து: 4 போ் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மரத்தில் ஜீப் மோதி விபத்துக்குள்ளானதில் 4 போ் சனிக்கிழமை காயமடைந்தனா். கல்வராயன் மலைப் பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரை (40), தன்ராஜ் (40), கருவேலம்பாடியைச் சோ்ந்த வெள்ளி (48)... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை (அக். 19) வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்கிறாா். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சனிக்கிழமை பி... மேலும் பார்க்க