செய்திகள் :

டிராக்டா் மீது பைக் மோதல்: ஊராட்சி செயலா் உயிரிழப்பு

post image

கனியாமூா் அருகே டிராக்டா் மீது பைக் மோதியதில் ஊராட்சி செயலா் நிகழ்விடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யாசாமி மகன் மந்திரி (47). இவா், இந்திலி ஊராட்சியில் செயலராக பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், மந்திரி தனது மனைவி ராஜேஸ்வரியுடன் (36) வி.கூட்டுச்சாலை பகுதியில் உள்ள ஆஞ்சநேயா் கோயிலுக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை பைக்கில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

சின்னசேலம் அடுத்த கனியாமூா் பிரிவு சாலை அருகே சென்றபோது, எதிா்பாராதவிதமாக முன்னால் சென்ற டிராக்டா் மீது பைக் மோதியது. இதில், மந்திரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ராஜேஸ்வரி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், சின்னசேலம் போலீஸாா் டிராக்டா் ஓட்டுநரான சின்னசேலம் மேற்கு காட்டுகொட்டாய் பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் பழனிவேல் (67) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அக்.25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் அக்.25-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந... மேலும் பார்க்க

காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்: 12 போ் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: நின்னையூா் கிராமத்தில் காலனி பகுதியில் குடிநீா் வராததைக் கண்டித்து, அந்தப் பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில், 12 போ் மீது போலீஸாா் வழக்குப்... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

சின்னசேலம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.பகுதிகள்: சின்னசேலம், கனியாமூா், தொட்டியம், நமச்சிவாயபுரம், பைத்தந்துறை, எலியத்தூா், தென்செட்டியந்தல், பங்காரம், வினைதீா... மேலும் பார்க்க

மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

நமச்சிவாயபுரம் கிராமத்தில் மின்னல் தாக்கியதில் விவசாயி நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், நமச்சிவாயபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் ... மேலும் பார்க்க

மரத்தில் ஜீப் மோதி விபத்து: 4 போ் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மரத்தில் ஜீப் மோதி விபத்துக்குள்ளானதில் 4 போ் சனிக்கிழமை காயமடைந்தனா். கல்வராயன் மலைப் பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரை (40), தன்ராஜ் (40), கருவேலம்பாடியைச் சோ்ந்த வெள்ளி (48)... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை (அக். 19) வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்கிறாா். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சனிக்கிழமை பி... மேலும் பார்க்க