செய்திகள் :

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் அடுத்த இலக்கு ராகுல் காந்தி! - ஒடிசா நடிகர் பதிவால் சர்ச்சை

post image

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் அடுத்த இலக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என ஒடிசா நடிகர் புத்ததித்யா மொகந்தி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'ஜெர்மனியிடம் கெஸ்டபோ(சிறப்பு காவல் படை) இருந்தது. இஸ்ரேலிடம் மொசாட்(புலனாய்வு அமைப்பு) உள்ளது. அமெரிக்காவில் சிஐஏ உள்ளது. இப்போது இந்தியாவில் லாரன்ஸ் பிஷ்னோய். அவர்க்ளின் பட்டியலில் அடுத்ததாக இருப்பது ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைஸி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் இந்திய தேசிய மாணவர்கள் சங்கத் தலைவர் உதித் பிரதான், காவல்துறையில் ஒடிசா நடிகர் புத்ததித்யா மீது புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து நடிகர் புத்ததித்யா தனது பதிவை நீக்கியத்துடன் மன்னிப்பும் கோரியுள்ளார்.

லாரன்ஸ் பிஷ்னோய்

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பாபா சித்திக் கொலைக்கு முழு பொறுப்பேற்பதாக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் அறிவித்தது.

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இதுபோன்று பல குற்றங்களில் ஈடுபட்டு வழக்குகள் உள்ளன.

தற்போது, தாங்கள் வணங்கும் குறிப்பிட்ட இன மான்களை வேட்டையாடியதற்காக, சல்மான் கானை கொலை செய்ய லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் முயற்சி செய்து வருகின்றனர்.

லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது பஞ்சாப் சபர்மதி மத்திய சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெண் போலீஸ் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட கொடூரம்!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுழலில், சுமங்கலி விரத தினமான ‘கர்வா சௌத்’ விரதம் கடைப்பிடிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை (அக். 20), உத்தரப் பிரதேசத்தில் பெண் காவ... மேலும் பார்க்க

மமதாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய மருத்துவக் குழு!

கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் முதல்வர் மமதா பானர்ஜி இன்று (அக். 21) பேச்சுவார்த்தை நடத்தினார். மாலை 5 மணிக்குத் தொடங்கி சுமார் இரண்டு மணிநேரத்துக்கு இந்த பேச்சுவார்த்தை நடைப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல்: காங்.,தேர்தல் குழு ஆலோசனை!

மகாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று (அக். 21) ஆலோசனை மேற்கொண்டது.மகாராஷ்டிரத்துக்கு நவ. 20ஆம் தேதி ஒரே கட்டமாக... மேலும் பார்க்க

ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!

போன்பே நிறுவனத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் பயன்பாட்டால் கடந்த 5 ஆண்டுகளில் 60 சதவிகித ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ்(ஏ.ஐ.) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்... மேலும் பார்க்க

பிரதமர் கல்வித்தகுதி வழக்கு: கேஜரிவாலின் மனு தள்ளுபடி!

பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பான அவதூறு வழக்கில் கேஜரிவால் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரதமரின் கல்வித் தகுதி குறிதது ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர... மேலும் பார்க்க

பாபா சித்திக் கொலை வழக்கு: 4 பேருக்கு அக். 25வரை காவல் நீட்டிப்பு!

பாபா சித்திக் கொலை வழக்கில் கைதான 4 பேருக்கு அக்டோபர் 25ஆம் தேதிவரை காவல் நீட்டித்து மும்பை உயர்நீதிமன்றம் இன்று (அக். 21) உத்தரவிட்டது. மேலும் பார்க்க