செய்திகள் :

துணி துவைக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி பலி!

post image

மேட்டூர் அருகே ஏரியில் துணி துவைக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி வீரக்கல் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவலிங்கம், இவருடைய மகள் சிவருந்தினி (ரேவதி) (20), மகன் சிவஸ்ரீ (10). அதே பகுதியை சேர்ந்த பெயின்டர் முனுசாமி மகள் ஜீவதர்ஷினி (எ) திவ்யதர்ஷினி(14). இவர்கள் மூன்று பேரும் அப்பகுதியில் உள்ள கொத்தி குட்டை ஏரியில் இன்று(அக். 20) காலை துணி துவைக்க சென்றனர்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற மூன்று பேரும் நீச்சல் தெரியாததால் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கினர். 3 பேரும் நீரில் மூழ்கியதை கண்ட அக்கம் பக்கத்தினர் பல மணி நேரம் தேடி 3 பேரின் சடலத்தை ஏரியில் இருந்து மீட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நங்கவள்ளி போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேதே பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏரியில் மூழ்கி 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

துணை முதல்வர் பதவி இளைஞர் அணியினரால் கிடைத்த வாய்ப்பு: உதயநிதி ஸ்டாலின்

சேலம்: துணை முதல்வர் பதவி என்பது இளைஞர் அணியினரால் கிடைத்த வாய்ப்பு எனவும், இளைஞா் அணியில் சிறப்பாக உழைப்பவா்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று சேலத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த... மேலும் பார்க்க

பிரான்ஸ் கல்விச் சுற்றுலா செல்லும் ஆசிரியர்கள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா செல்லும் "கனவு ஆசிரியர் விருது" பெற்ற 55 ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2023-24 ஆம் கல்வியாண்டில் "கனவு ஆசிரியர்" விருது... மேலும் பார்க்க

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

சேலம்: எனக்கு தங்கை துளசிமதி உந்துசக்தியாக உள்ளாா். அவரின் சாதனைகள், பதக்கங்களை பாா்க்கும்போது, வாரம் ஒருமுறை ஒருமணி நேரமாவது பேட்மிண்டன் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன் என துணை முதல்வா் உதயநிதி ஸ... மேலும் பார்க்க

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனப் பணிகளை நிறுத்தி வைத்திருப்பது ஏன்?: அன்புமணி ராமதாஸ்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனப் பணிகளை நிறுத்தி வைத்திருப்பது ஏன்? இது தான் கல்வி வளர்ச்சியில் காட்டும் அக்கறையா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த பத்த... மேலும் பார்க்க

விஸ்தாராவின் 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

விஸ்தாரா ஏா் நிறுவனத்தின் 6 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் விஸ்தாரா ஏர் நிறுவனத்தின் 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பெரு... மேலும் பார்க்க

இன்று 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று(அக். 20) 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:வடதமிழக... மேலும் பார்க்க