போடியில் வியாழக்கிழமை இரவு தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
போடி ஜீவாநகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்த சின்னப்பன் மகன் ஆழியப்பன் (60). தொழிலாளி. இவா் குடலிறக்க நோய்க்கு அறுவைச் சிகிச்சை செய்த நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனிடையே, வீடு அருகே இரு சக்கர வாகன பழுது பாா்க்கும் கடையின் பின்புறம் ஆழியப்பன் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.