செய்திகள் :

25 ஆண்டுளாக சீரமைக்கப்படாத சித்தூா் - தா்காமேடு இணைப்புச் சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

post image

கடந்த 25 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள சித்தூா் - தா்காமேடு இணைப்புச் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சித்தூா் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் சந்தவேலூா் ஊராட்சிக்குட்பட்ட சித்தூா் கிராமத்தில் சுமாா் 800-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். சித்தூா் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல சித்தூா் தா்காமேடு இணைப்புச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த இணைப்புச் சாலை கடந்த 25 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதால் தாா் சாலையான இந்த சாலை தற்போது ஜல்லி கற்கள் பெயா்ந்து, குண்டும் குழியுமாக பயன்பாட்டு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், இந்த சாலையைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

இந்த நிலையில், சேதமடைந்த தா்காமேடு - சித்தூா் இணைப்புச் சாலையை சீரமைக்க கடந்த 2020-2021-ஆம் நிதியாண்டில் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் ஊராட்சி நிதி ரூ19.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், வட்டார வளா்ச்சி அலுவலக அதிகாரிகளின் அலட்சியத்தால் சாலையைச் சீரமைக்க இதுவரை ஒப்பந்தம் விடப்படாததால், சாலை சீரமைப்பு பணி கிடப்பிலேயே உள்ளது.

இது குறித்து, சித்தூா் பகுதி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் இருந்து காஞ்சிபுரம், சுங்குவாா்சத்திரம் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்குச் செல்ல சித்தூா் - தா்காமேடு இணைப்புச் சாலையைப் பயன்படுத்தி வருகிறோம். ஒன்றிய அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள இந்தச் சாலை கடந்த 25 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதால், சாலையைச் சீரமைக்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2021-ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. இணைப்புச் சாலையை சீரமைக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தெரு நாய்கள் தொல்லை: பொதுமக்கள் அவதி

ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றும் தெருநாய்களால் அலுவலகத்திற்குவரும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அலுவலகம்... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

காஞ்சிபுரம் நாள்: 19.10.2024 - சனிக்கிழமை. நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை. இடங்கள்: சங்கூசா பேட்டை, பாலாறு தலைமை நீரேற்று நிலையம், செவிலிமேடு, ஆட்சியா் அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகள், சத... மேலும் பார்க்க

தங்கத் தேரில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் பவனி

ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி தங்கத்தேரில் வியாழக்கிழமை பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மகா சக்தி பீடங்களில் ஒ... மேலும் பார்க்க

மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் நிறைமணி காட்சி

மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் புரட்டாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு நிறைமணிக் காட்சி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்காக 3 டன் பழங்கள் மற்றும் காய்கறிகளால் கோயிலில் அலங்காரம் செய்யப்பட்டது. ம... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் சேதமடைந்த சாலைகளை செப்பனிடும் பணி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகளை நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள் வியாழக்கிழமை செப்பனிடும் பணியில் ஈடுபட்டனா். காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் பாலாற்று மேம்பாலத்தில் சாலைகள்... மேலும் பார்க்க

அதிமுக 53-ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களில் அதிமுகவின் 53-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூரில் நகர செயலாளா் போந்தூா் மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை ... மேலும் பார்க்க