செய்திகள் :

பெட்ரோல் நிலையத்தில் பரபரப்பு! தீப்பிடித்து எரிந்த வேன்!

post image

பெட்ரோல் நிலையத்திற்கு எரிவாயு நிரப்புவதற்காக சென்ற ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

கோவை உக்கடம் அருகே பெட்ரோல் மற்றும் பெட்ரோலியம் எரிவாயு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அவ்வழியே சென்ற ஆம்னி வேன் ஒன்று கேஸ் நிரப்புவதற்காக பெட்ரோல் நிலையத்துக்கு சென்றுள்ளது. அப்போது வேனின் முன்பகுதியிலிருந்து புகை வந்ததால், உடனடியாக வாகனத்தை நிறுத்திய ஓட்டுநர், வேனில் இருந்து இறங்கி ஓடிய நிலையில், கண்ணிமைக்கும் நேரத்தில் அதிலிருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து, வேன் முழுவதும் தீப்பிடிக்கத் தொடங்கியது.

இதையும் படிக்க: கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் 3 பேர் கைது!

இதனையடுத்து, அருகிலிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் வருவதற்கு முன்பாகவே வேன் முற்றிலும் எரிந்தது.

தீ விபத்து ஏற்பட்ட உடனே பெட்ரோல் நிலையத்தின் மின் இணைப்பை ஊழியர்கள் நிறுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

பின்னர் அங்கு வந்த தியணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததுடன், மேலும் தீ பரவாமல் தடுத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

தீபாவளி: நெல்லை, மதுரைக்கு சிறப்பு ரயில்கள்!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நெரிசலை குறைப்பதற்காக அக். 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்அக். 29-ல் சென்னை சென்ட்ரலில் இரு... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 25 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கார... மேலும் பார்க்க

டானா புயல்: 28 ரயில்கள் ரத்து!

டானா புயல் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட இருந்த 28 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை(அக். 23), நாளை மறுநாள்(அக... மேலும் பார்க்க

ஏடிஎம் கொள்ளை: வடமாநில கும்பலை பிடித்த காவலர்களுக்கு முதல்வர் பாராட்டு!

ஏ.டி.எம். கொள்ளை தொடர்பாக வடமாநில கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக். 22) நாமக்கல் மாவட்டத்திற... மேலும் பார்க்க

புது வசந்தம் பட பாணியில் புதிய தொடர்!

புது வசந்தம் பட பாணியில் உருவாகியுள்ள புதிய தொடரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.வித்தியாசமான கதையமைப்பு, விறுவிறுப்பான கதைக்களம் என சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் டிஆர்பியில் முன்னணியில... மேலும் பார்க்க

ரூ. 499-க்கு 15 மளிகைப் பொருள்கள்: அமுதம் அங்காடிகளில் இன்று முதல் விற்பனை!

தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.499-க்கு 15 மளிகைப் பொருள்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு அமுதம் அங்காடிகளில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் குறைந்த விலையில் மளிகைப் பொருள... மேலும் பார்க்க