செய்திகள் :

தீபாவளி: நெல்லை, மதுரைக்கு சிறப்பு ரயில்கள்!

post image

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நெரிசலை குறைப்பதற்காக அக். 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்

அக். 29-ல் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில்(வண்டி எண்: 06001) மறுநாள் கன்னியாகுமரியை சென்றடையும். மறுவழித்தடத்தில் அக். 30-ல் பிற்பகல் 2.45 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த ரயில்(வண்டி எண்: 06002) மறுநாள் காலை 3.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரல்- கன்னியாகுமரி இடையே அக்டோபர் 29 மற்றும் நவம்பர் 5 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. மறுவழித்தடத்தில் கன்னியாகுமரி - எழும்பூர் இடையே அக்டோபர் 30 நவம்பர் 6 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.

இந்த சிறப்பு ரயில் விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியே இயக்கப்படுகிறது.

அக். 30-ல் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில்(வண்டி எண்: 06005) மறுநாள் செங்கோட்டையை சென்றடையும். மறுவழித்தடத்தில் அக். 31-ல் இரவு 7.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த ரயில்(வண்டி எண்: 06006) மறுநாள் காலை 9.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரல் - செங்கோட்டை இடையே அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 6 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. மறு வழித்தடத்தில் செங்கோட்டை - சென்னை சென்ட்ரல் இடையே அக்டோபர் 31, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.

இந்த சிறப்பு ரயில் சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தென்காசி வழியே இயக்கப்படுகிறது.

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை(அக். 23) காலை 8 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு கட்டட விபத்து: ஒருவர் பலி; 14 பேர் மீட்பு!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை கட்டுமானப் பணியில் இருந்த 7 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.இந்த சம்... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 25 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கார... மேலும் பார்க்க

டானா புயல்: 28 ரயில்கள் ரத்து!

டானா புயல் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட இருந்த 28 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை(அக். 23), நாளை மறுநாள்(அக... மேலும் பார்க்க

ஏடிஎம் கொள்ளை: வடமாநில கும்பலை பிடித்த காவலர்களுக்கு முதல்வர் பாராட்டு!

ஏ.டி.எம். கொள்ளை தொடர்பாக வடமாநில கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக். 22) நாமக்கல் மாவட்டத்திற... மேலும் பார்க்க

பெட்ரோல் நிலையத்தில் பரபரப்பு! தீப்பிடித்து எரிந்த வேன்!

பெட்ரோல் நிலையத்திற்கு எரிவாயு நிரப்புவதற்காக சென்ற ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.கோவை உக்கடம் அருகே பெட்ரோல் மற்றும் பெட்ரோலியம் எரிவாயு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அ... மேலும் பார்க்க

புது வசந்தம் பட பாணியில் புதிய தொடர்!

புது வசந்தம் பட பாணியில் உருவாகியுள்ள புதிய தொடரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.வித்தியாசமான கதையமைப்பு, விறுவிறுப்பான கதைக்களம் என சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் டிஆர்பியில் முன்னணியில... மேலும் பார்க்க