செய்திகள் :

அமைதியை நிலைநாட்ட இந்தியா ஒத்துழைக்கும்: பிரதமர் மோடி

post image

ரஷியா - உக்ரைன் விவகாரத்தில் அமைதியான முறையில் தீர்வு காண இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 22) தெரிவித்தார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு ரஷியா தலைமையில் அந்நாட்டின் கசான் நகரத்தில் இன்றும் (அக். 22) நாளையும் (அக். 23) நடைபெறுகிறது.

மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங், ஈரான் நாட்டின் அதிபா் மசூத் ரஜாவி உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கின்றனா். இதற்காக பிரதமர் மோடி ஒன்று காலை ரஷியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமைதியை நிலைநாட்ட ஒத்துழைப்பு

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மோடி பேசியதாவது,

''ரஷியா - உக்ரைன் பிரச்னையில் அனைத்து தரப்பினருடனும் இந்தியா தொடர்பில் உள்ளது. அனைத்து முரண்களுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்பதே எங்களின் நிலைப்பாடாக உள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான மோதல்களுக்கு அமைதியான தீர்வுகள் இருக்க வேண்டும் என்று இந்தியா நம்புகிறது. அமைதியை நிலைநாட்ட இந்தியா எப்போதும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | நிராதரவாய் உணர்கிறோம்.. பெண் மருத்துவரின் பெற்றோர் அமித் ஷாவுக்கு கடிதம்

கடந்த 3 மாதங்களில் 2-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மோடியுடனான பேச்சுவார்த்தையின்போது இதனை ரஷிய அதிபர் புதினும் நினைவு கூர்ந்தார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது டானா புயல்!

மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது எ... மேலும் பார்க்க

மனைவி திருநங்கை? மருத்துவப் பரிசோதனைக்காக நீதிமன்றம் நாடிய கணவர்!

தில்லியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவிக்கு அரசு மருத்துவமனையில், பரிசோதனை செய்து பாலினத்தை உறுதிப்படுத்துமாறு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தனது மனைவி திருநங்கை என குற்றம் சாட்டியு... மேலும் பார்க்க

பெங்களூருவில் கட்டுமானப் பணியில் இருந்த கட்டடம் இடிந்தது: 17 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம்

பெங்களூருவில் கட்டுமானப் பணியில் இருந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் 17 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கர்நாடக மாநிலம், பாபுசபாளையவில் கட்டுமானத்தில் இருந்த கட்டடம் செவ்... மேலும் பார்க்க

நிராதரவாய் உணர்கிறோம்.. பெண் மருத்துவரின் பெற்றோர் அமித் ஷாவுக்கு கடிதம்

கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் மருத்... மேலும் பார்க்க

நாக்பூரில் ஷாலிமர் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன

நாக்பூரில் ஷாலிமர் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டதால் பரபரப்பு நிலவியது. மகாராஷ்டிர மாநிலம், கலாம்னா ரயில் நிலையம் அருகே சிஎஸ்எம்டி ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ் 2 மற்றும் ஒரு பார்சல் பெட்ட... மேலும் பார்க்க

டானா புயல்: மேற்கு வங்க பள்ளிகளுக்கு அக். 26 வரை விடுமுறை!

டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்டோபர் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது.வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு ... மேலும் பார்க்க