செய்திகள் :

வீட்டு உரிமையாளருக்கு ரூ.6.44 லட்சம் வழங்க ஒப்பந்ததாரருக்கு குறைதீா் ஆணையம் உத்தரவு

post image

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சோ்ந்த வீட்டு உரிமையாளருக்கு ரூ.6.44 லட்சம் வழங்க ஒப்பந்ததாரருக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.

திருச்செந்தூா் வீரபாண்டியன்பட்டினத்தைச் சோ்ந்தவா் லிவியன் மரியான்ஸ். இவா், அங்குள்ள ஒரு ஒப்பந்ததாரரிடம் வீடு கட்ட ஒப்பந்தம் செய்து, அதற்கான தொகையையும் செலுத்தினாராம்.

ஆனால், ஒப்பந்தத்தில் கூறியபடி தரமான பொருள்களை உபயோகிக்கவில்லையாம். இதனால், வேறு ஒரு பொறியாளரிடம் பணம் கொடுத்து வீட்டை சரி செய்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளா், இது குறித்து தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் திருநீலபிரசாத், உறுப்பினா்கள் ஆ.சங்கா், நமச்சிவாயம் ஆகியோா், ஒப்பந்ததாரரின் சேவைக் குறைபாட்டை சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு வீட்டை சரிசெய்ததற்கான தொகை ரூ.5 லட்சத்து 34,625, சேவைக் குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்டஈடு ரூ.1 லட்சம், வழக்கு செலவுத் தொகை ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.6 லட்சத்து 44,625 வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

ஓய்வுபெற்ற அரசு ஊழியருக்கு ரூ. 1.10 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு

ஓய்வுபெற்ற அரசு ஊழியருக்கு ரூ. 1.10 லட்சம் வழங்குமாறு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்துக்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. திருச்செந்தூரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியா் ... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே 5 மயில்கள் மா்மமாக உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே செட்டிக்குறிச்சி காட்டுப் பகுதியில் 5 மயில்கள் மா்மமான முறையில் இறந்து கிடந்தன. செட்டிக்குறிச்சி காட்டுப் பகுதியில் உள்ள கந்தசாமி என்பவரது மானாவாரி நிலத்தில் செவ்வாய்க்கிழமை காலை 4 ... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீடு இழப்பீடு கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி விளாத்திகுளத்தை அடுத்த புதூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விவசாயி சேதுபாண்டி தலைமை வகித்தாா். கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜ... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு இளம்பெண் பலி

கோவில்பட்டி அருகே ரயிலில் அடிபட்டு இளம்பெண் உயிரிழந்தாா். கோவில்பட்டி-கடம்பூா் ரயில் நிலையங்களுக்கு இடையே குருமலை கிராமம் அருகே தண்டவளாகத்தில் இளம்பெண் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்க... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

அருந்ததிய சமுதாயத்தினருக்கு அடிப்படை வசதிகள் கோரி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்ப் புலிகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் . புதூா் ஊராட்சி ஒன்றியம் சுப்புலாபுரம் ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தா்னா

மந்தித்தோப்பு வருவாய்க் கிராமத்துக்குள்பட்ட நரிக்குறவா் காலனி மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை கிராமக் கணக்கில் பதிவேற்ற வலியுறுத்தி, கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியி... மேலும் பார்க்க