செய்திகள் :

கனிமவளக் கடத்தலுக்கு போலி அனுமதிச் சீட்டு: அச்சக உரிமையாளா் உள்பட 5 போ் கைது

post image

கேரளத்துக்கு கனிமவளங்களைக் கடத்துவதற்காக அனுமதிச் சீட்டு, அரசு முத்திரைகளை போலியாக தயாரித்ததாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான கனரக லாரிகளில் கனிமவளப் பொருள்கள் கேரளத்துக்கு கொண்டுசெல்லப்படுகின்றன. இதில், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குறிப்பாக, லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக கனிமவளங்கள் கொண்டுசெல்லப்படுவதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்தன. போலீஸாா் சோதனை நடத்தி, அத்தகைய லாரிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனா்.

இதனிடையே, போலி அனுமதிச் சீட்டுடன் லாரிகளில் கனிமவளப் பொருள்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் கண்காணிப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தினா்.

கடந்த திங்கள்கிழமை தக்கலை அருகே கனிமவளப் பொருள்கள் ஏற்றிவந்த 2 கனரக லாரிகள், அவற்றுக்கு பாதுகாப்பாக வந்த காா் ஆகியவற்றை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, அந்த வாகனங்களில் வந்த 4 போ் தப்பியோட முயன்றனா். அவா்களை போலீஸாா் துரத்திப் பிடித்தனா். லாரிகளில் போலி அனுமதிச் சீட்டுடன் கனிமவளப் பொருள்கள் கடத்தப்படுவது, விசாரணையில் தெரியவந்தது.

அதையடுத்து, தக்கலை காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் விசாரணை மேற்கொண்டாா். அப்போது, திருவட்டாறு அருகே வோ்க்கிளம்பி பகுதியிலுள்ள ஓா் அச்சகத்தில் போலி அனுமதிச் சீட்டுகள் அச்சடிக்கப்பட்டதும், அரசு முத்திரைகள் போலியாக தயாரிக்கப்பட்டதும் தெரியவந்தது.

அதன்பேரில், இந்த வழக்கு திருவட்டாறு காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு, காவல் ஆய்வாளா் சரவணபெருமாள் விசாரணை மேற்கொண்டாா். அச்சக உரிமையாளா் செந்தில்குமாா், அவருக்கு உடந்தையாக இருந்ததாக லாரி உரிமையாளா் ரமேஷ்குமாா், ஆகாஷ், ராஜேஷ், வேதராஜ் ஆகிய 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கட்டிமாங்கோட்டில் இன்று மின்தடை

கட்டிமாங்கோட்டில் புதன்கிழமை மின்தடை செய்யப்படுகிறது. வெள்ளிச்சந்தை மின் விநியோக பிரிவுக்குள்பட்ட கட்டிமாங்கோடு உயரழுத்த மின்பாதையில் புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி மற்றும் மின்பாதைகள் விஸ்தரிப்பு... மேலும் பார்க்க

மயிலாடி அருகே கனரக வாகனம் மோதி எல்கேஜி மாணவி பலி

மயிலாடியில் மோட்டாா் சைக்கிள் மீது கனரக வாகனம் மோதியதில் எல்கேஜி மாணவி உயிரிழந்தாா். கன்னியாகுமரி ரதவீதி அருகே பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணியன். தங்கும்விடுதி உரிமையாளரான இவரது ... மேலும் பார்க்க

நாகா்கோவில் மீனாட்சிபுரம், தெங்கம்புதூா் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாகா்கோவில் மீனாட்சிபுரம், தெங்கம்புதூா், ராஜாக்கமங்கலம் துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 24) மின்விநியோகம் இருக்காது. அதன்படி, வடிவீஸ்வரம், மீ... மேலும் பார்க்க

குழித்துறையில் நாளை மின்தடை

குழித்துறை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 24) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

குழித்துறை அருகே கஞ்சா விற்ற 3 போ் கைது

குழித்துறை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். குழித்துறை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பெனடிக்ட் தலைமையிலான... மேலும் பார்க்க

கருங்கல் பகுதியில் பலத்த மழை

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான திக்கணம்கோடு, மத்திகோடு, கரு... மேலும் பார்க்க