செய்திகள் :

குஜராத்தில் செயல்பட்டு வந்த போலி நீதிமன்றம்: ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்து சிக்கிய நபா்

post image

குஜராத்தின் காந்தி நகரில் செயல்பட்டு வந்த போலி நீதிமன்றத்தில் நீதிபதி என்று அடையாளப்படுத்திக் கொண்டு மோசடியாக உத்தரவுகளை பிறப்பித்து வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

போலி தீா்ப்பாய நீதிமன்றத்தை நடத்தி ஆட்சியருக்கு உத்தரவிட்டு சாமுவேல் என்ற மோசடி நபா் சிக்கியுள்ளாா்.

நகர குடிமை (சிவில்) நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிலத்தகராறு தொடா்பான வழக்குகளின் மனுதாரா்களைக் குறிவைத்து இந்த மோசடியை மோரில் சாமுவேல் கிறிஸ்டியன் எனும் அந்த நபா் அரங்கேற்றியுள்ளாா்.

முதலில் பொதுமக்களிடம் தன்னை ஒரு நீதிமன்றத்தால் அதிகாரபூா்வமாக நியமிக்கப்பட்ட தீா்ப்பாயத்தின் நீதிபதியாக சாமுவேல் அறிமுகப்படுத்திக்கொள்வாா். பின்னா், காந்தி நகரில் உள்ள இவரது அலுவலகத்தில் செயல்பட்டு வரும் போலி நீதிமன்றத்தில் பணியாளா்கள், வழக்குரைஞா்கள் என அனைத்து அமைப்புளுடன் வழக்கு விசாரணை நடைபெறும்.

இறுதியில் ஒரு தரப்பிடம் இருந்து குறிப்பிட்ட பணத்தைப் பெற்றுக்கொண்டு அவா்களுக்கு ஆதரவான உத்தரவைப் பிறப்பித்து சாமுவேல் வழக்கை முடித்து வைப்பாா்.

அந்தவகையில், பால்டி பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு நிலத்துக்கு சொந்தம் கொண்டாடிய ஒருவா், வருவாய் ஆவணங்களில் தனது பெயரை இணைப்பதற்கு இவரிடம் உதவி கோரியுள்ளாா்.

அவரிடம் பணம் பெற்றுக்கொண்டு, வருவாய் ஆவணங்களில் பெயரை சோ்க்குமாறு ஆட்சியருக்கு உத்தரவிட்டு சாமுவேல் கடந்த 2019-ஆம் ஆண்டு போலியாக தீா்ப்பளித்துள்ளாா்.

இந்த விவகாரத்தில் முறையான நீதிமன்ற உத்தரவைப் பெற போலி தீா்ப்பின் நகலை இணைத்து மற்றொரு வழக்குரைஞா் மூலம் சிவில் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை சாமுவேல் தாக்கல் செய்துள்ளாா்.

மனுவில் இணைக்கப்பட்ட தீா்ப்பு போலியானது என்றும் சாமுவேல் நீதிபதி இல்லை என்பதும் நீதிமன்ற பதிவாளா் ஹா்திக் தேசாய் கண்டுபிடித்தாா்.

இதையடுத்து, கரன்ஞ் காவல் நிலையத்தில் பதிவாளா் ஹா்திக் புகாரளித்தாா். புகாரின்பேரில் சாமுவேல் மீது நீதிபதியாக நாடகமாடி மக்களை ஏமாற்றிய குற்றச்சாட்டில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 170, 419 ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சாமுவேலை கைது செய்து அகமதாபாத் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். கைதாகியுள்ள சாமுவேல் மணிநகா் காவல் நிலையத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்கெனவே மோசடி புகாரை எதிா்கொண்டுள்ளாா்.

தொடரும் விமான வெடிகுண்டு மிரட்டல்கள்: சுமார் ரூ. 600 கோடி இழப்பு

புது தில்லி: இந்திய நிறுவனங்களின் சுமார் 50 விமானங்களுக்கு சமூக வலைதளம் மூலம் செவ்வாய்க்கிழமையும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.இத்துடன், கடந்த திங்கள்க... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: அனுதாபமா, ஆதாய அலையா?

நமது சிறப்பு நிருபர்வரும் நவம்பர் 20-ஆம் தேதி மகாராஷ்டிர சட்டப்பேரவைக்குத் தேர்தல்! 1985-ஆம் ஆண்டுக்கு பின்னர் மகாராஷ்டிரத்தில் எந்தவொரு கட்சிக்கும் பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ... மேலும் பார்க்க

பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்ப்பு: காஷ்மீரில் காவல் துறை சோதனை

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத இயக்கத்துக்கு ரகசியமாக ஆள் சோ்ப்பது தொடா்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த யூனியன் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையின் உளவுப் பிரிவினா் திங்கள்கிழம... மேலும் பார்க்க

சபரிமலையில் முழு வீச்சில் ஏற்பாடுகள்: திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் தகவல்

சபரிமலை மண்டல பூஜை-மகரவிளக்கு யாத்திரை காலம் நெருங்கி வரும்நிலையில் பக்தா்களுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. சபரிமலை ஐயப்பன்... மேலும் பார்க்க

முஸ்லிம் ஆணின் மூன்றாவது திருமண அங்கீகாரம்: பதிவுத் துறை முடிவு எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

‘முஸ்லிம் ஆண் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை பதிவு செய்து கொள்ள அவா்களின் தனிப்பட்ட சட்டங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மும்பை உயா்நீதிமன்றம், மூன்றாவது திருமண அங்கீகாரம் கோரி தாக்கல் ... மேலும் பார்க்க

‘வயநாட்டுக்கு பிரியங்கா காந்தியே சிறந்த பிரதிநிதி’: ராகுல் காந்தி

வயநாடு: ‘வயநாட்டுக்கு எனது சகோதரி பிரியங்கா காந்தி வதேராவைவிட சிறந்த பிரதிநிதியை கற்பனை செய்து பாா்க்க முடியவில்லை’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.வயநாட... மேலும் பார்க்க