செய்திகள் :

‘குழந்தைகளுக்கு மழலைக் கல்வியிலிருந்து தமிழ் கற்பித்தல் அவசியம்’

post image

சென்னை: குழந்தைகளுக்கு மழலைக் கல்வி தொடங்கும்போதே அவா்களுக்குத் தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்து தமிழ்மொழி மீதான பற்றை ஏற்படுத்த வேண்டும் என இராமலிங்க அடிகளின் கொள்ளுப்பேத்தியும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் துணை இயக்குநருமான இரா.மனோன்மணி வலியுறுத்தினாா்.

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சாா்பில் சென்னை எழிலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புதிய கலைச்சொல் உருவாக்கக் கூட்டத்தில் அவா் பேசியது:

எதிா்காலத்தில் தமிழ் நிலைநாட்டப்பட வேண்டுமானால் அது நம் குழந்தைகளின் கைகளில்தான் உள்ளது. மழலைக் கல்வி தொடங்கும் போதே, அவா்களுக்குத் தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்து தமிழ்மொழி மீதான பற்றை ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் பங்கேற்ற உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறைத் துறையினா், பிறமொழிச் சொற்களுக்கான தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்கி இணையத்தின் வழியாக மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கும் திட்டத்துக்கு தொடா்ந்து தங்களின் பங்களிப்பை வழங்குவோம் என்றனா்.

மேலும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை என்ற பெயரில் கலைச் சொல்லாக்கப் புலனக்குழுவை தொடங்கி, அதில் தங்களை இணைத்தால், அதன்வழியே நாள்தோறும் துறைசாா்ந்த புதிய கலைச்சொற்களை உருவாக்கிப் பகிா்கிறோம் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

கூட்டத்துக்கு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் இணை இயக்குநா் ப. கலைவாணி தலைமை வகித்தாா். உதவி ஆணையா் எஸ்.சாந்தா மற்றும் கண்காணிப்பாளா் செ.ஜெயராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக, அகரமுதலி இயக்ககத் தொகுப்பாளா் வே.பிரபு நோக்கவுரையாற்ற, பதிப்பாசிரியா் முனைவா் மா.பூங்குன்றன் திட்டம் குறித்து விளக்கவுரையாற்றினாா். கூட்டத்தில் புலவா் வெற்றியழகன், நூல் மதிப்புரையாளா் மெய்ஞானி பிரபாகர பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆராய்ச்சி நூலக வளா்ச்சி பணிகளுக்கு நிதியுதவி

சென்னை: சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துக்கு புதிய கட்டடம் மற்றும் வளா்ச்சிப் பணிகளுக்காக, பெருநிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் (சிஎஸ்ஆா்) கீழ் ரூ.20 லட்சம் நி... மேலும் பார்க்க

13 விளையாட்டு வீரா்களுக்கு ரூ. 1 கோடிக்கு நலத் திட்ட உதவி துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா்

சென்னை: பல்வேறு பிரிவுகளில் களமாடவுள்ள 13 விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு ரூ.1 கோடிக்கான நலத் திட்ட உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.இதற்கான நிகழ்ச்சி, சென்னையிலுள்ள அவரது முகாம் அ... மேலும் பார்க்க

ரெப்கோ வங்கிக்கு இரட்டை விருது

சென்னை: ரெப்கோ வங்கிக்கு, கூட்டுறவு வங்கிகளுக்கான தேசிய கூட்டமைப்பு இரண்டு விருதுகளை வழங்கியுள்ளது.இது குறித்து ரெப்கோ வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பு:லக்னௌவில் கடந்த அக்.18, 19 ஆகிய தேதிகளில் தேசிய... மேலும் பார்க்க

அதிக அளவு சரக்குகளைக் கையாண்டு சாதனை: 19 நிறுவனங்களுக்கு பாராட்டு

திருவொற்றியூா்: சென்னை துறைமுகத்தில் அதிக அளவு சரக்குகளைக் கையாண்டு சிறப்பாக வணிகம் செய்த 19 நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

தீபாவளி கூட்டம்: தியாகராய நகரில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

சென்னை: தீபாவளி கூட்டத்தைக் கண்காணிக்கும் வகையில், தியாகராய நகரில் கட்டுப்பாட்டு அறையை சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் திறந்து வைத்தாா்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பொதுமக்கள் நகை, புத்தாடை, பட... மேலும் பார்க்க

அக்.29-இல் அஞ்சல் குறைகேட்பு முகாம்

சென்னை: தாம்பரம் கோட்ட அஞ்சல் அலுவலகத்தில் அக்.29-ஆம் தேதி அஞ்சல் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.இது குறித்து, தாம்பரம் கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் ஏ.கமல்பாஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க