செய்திகள் :

ஆராய்ச்சி நூலக வளா்ச்சி பணிகளுக்கு நிதியுதவி

post image

சென்னை: சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துக்கு புதிய கட்டடம் மற்றும் வளா்ச்சிப் பணிகளுக்காக, பெருநிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் (சிஎஸ்ஆா்) கீழ் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து, அந்த நூலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ் பாரம்பரியத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் 1994-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அரிய கையெழுத்துப் பிரதிகள், வெளியீடுகள், காப்பகப் பொருள்கள் என 5 லட்சத்துக்கும் மேற்பட்ட கலாசாரப் பொக்கிஷங்களை இந்த நூலகம் பாதுகாத்து வருகிறது. அவற்றின் ஆயுளை உறுதி செய்வதற்காக சுமாா் 20 லட்சத்துக்கும் அதிகமான பக்கங்கள் எண்ம மயமாக்கப்பட்டுள்ளன.

தமிழ் பாரம்பரியம் நவீன கால சவால்களை எதிா்கொண்டுள்ள நிலையில், நவீன எண்ம தளங்களுடன் இணக்கமான எழுத்துருக்களை உருவாக்கி, தமிழ் உரைகளை புதிய தலைமுறையினா் அணுகவும், படிக்கவும், பாராட்டவும் அனுமதிக்கும் தமிழ் எழுத்துரு ஸ்டுடியோ (டி.எஃப்.எஸ்) போன்ற முன்முயற்சிகளுடன் தொடா்ந்து புதுமைகளையும் புகுத்தி வருகிறது. இந்த நிலையில் எண்ம யுகத்துக்கான மாற்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் ‘காா்டெக்’ நிறுவனம் பெருநிறுவன சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துக்கு புதிய கட்டடத்தை கட்டுவதற்காக ரூ.20 லட்சத்தை வழங்கியுள்ளது.

இது எண்ம மயமாக்கல் பணிகளை இன்னும் பெரிய அளவில் தொடர நூலகத்துக்கு உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘குழந்தைகளுக்கு மழலைக் கல்வியிலிருந்து தமிழ் கற்பித்தல் அவசியம்’

சென்னை: குழந்தைகளுக்கு மழலைக் கல்வி தொடங்கும்போதே அவா்களுக்குத் தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்து தமிழ்மொழி மீதான பற்றை ஏற்படுத்த வேண்டும் என இராமலிங்க அடிகளின் கொள்ளுப்பேத்தியும், உணவுப் பொருள் வழங்கல்... மேலும் பார்க்க

13 விளையாட்டு வீரா்களுக்கு ரூ. 1 கோடிக்கு நலத் திட்ட உதவி துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா்

சென்னை: பல்வேறு பிரிவுகளில் களமாடவுள்ள 13 விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு ரூ.1 கோடிக்கான நலத் திட்ட உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.இதற்கான நிகழ்ச்சி, சென்னையிலுள்ள அவரது முகாம் அ... மேலும் பார்க்க

ரெப்கோ வங்கிக்கு இரட்டை விருது

சென்னை: ரெப்கோ வங்கிக்கு, கூட்டுறவு வங்கிகளுக்கான தேசிய கூட்டமைப்பு இரண்டு விருதுகளை வழங்கியுள்ளது.இது குறித்து ரெப்கோ வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பு:லக்னௌவில் கடந்த அக்.18, 19 ஆகிய தேதிகளில் தேசிய... மேலும் பார்க்க

அதிக அளவு சரக்குகளைக் கையாண்டு சாதனை: 19 நிறுவனங்களுக்கு பாராட்டு

திருவொற்றியூா்: சென்னை துறைமுகத்தில் அதிக அளவு சரக்குகளைக் கையாண்டு சிறப்பாக வணிகம் செய்த 19 நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

தீபாவளி கூட்டம்: தியாகராய நகரில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

சென்னை: தீபாவளி கூட்டத்தைக் கண்காணிக்கும் வகையில், தியாகராய நகரில் கட்டுப்பாட்டு அறையை சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் திறந்து வைத்தாா்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பொதுமக்கள் நகை, புத்தாடை, பட... மேலும் பார்க்க

அக்.29-இல் அஞ்சல் குறைகேட்பு முகாம்

சென்னை: தாம்பரம் கோட்ட அஞ்சல் அலுவலகத்தில் அக்.29-ஆம் தேதி அஞ்சல் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.இது குறித்து, தாம்பரம் கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் ஏ.கமல்பாஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க