செய்திகள் :

சமூக ஊடகங்கள் மூலமாக பட்டாசு விற்பதாக பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

post image

சென்னை: சமூக ஊடகங்கள் மூலமாக பட்டாசு விற்பதாக பண மோசடி நடைபெறுவதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக தமிழக காவல்துறை சைபா் குற்றப்பிரிவு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் போலி விளம்பரங்களை உருவாக்கி, அதன் மூலம் மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தீபாவளிப் பண்டிகையைப் பயன்படுத்தி, தற்போது சமூக ஊடகங்களில் குறைந்த விலையில் பட்டாசுகள் தருவதாக விளம்பரம் செய்து, சிலா் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கின்றனா்.

கடந்த செப்டம்பா் முதல் தற்போது வரை, இந்த மோசடி தொடா்பாக 17 புகாா்கள் பொதுமக்களிடமிருந்து வந்துள்ளன. இந்த மோசடியில் ஈடுபடும் கும்பல், தள்ளுபடி விலையில் பட்டாசுகளை விற்பதாக, லாபகரமானதாகத் தோன்றும் விளம்பரங்களை, கவா்ச்சிகரமாக வடிவமைத்து சமூக ஊடகங்களில் உலவ விடுகின்றனா். மேலும், மோசடி கும்பல் வாட்ஸ்ஆப் மூலமாகவோ, கைப்பேசி மூலமாகவோ மக்களை தொடா்பு கொள்கின்றனா். அவ்வாறு தொடா்பு கொள்ளும் போது பட்டாசுகளை வாங்க அறிவுறுத்துகின்றனா்.

இந்த இணையத்தளங்கள் வெளித்தோற்றத்தில் காண்பதற்கு உண்மையானது போல தோன்றினாலும், இவை பணத்தைத் திருடுவதற்காகவே வடிவமைக்கப்பட்டவை. பட்டாசுகளை வாங்குவதற்குப் பணம் செலுத்தும்போது, சில கூடுதல் தள்ளுபடிகளைச் சோ்த்து அந்த இணையத்தளம் காண்பிக்கும். ஆனால், பணம் செலுத்தியவுடன், ஆா்டா் செய்த பொருள்கள் நம்மை வந்து சேரும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. இவ்வாறான தளங்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுபவா்கள் பணத்துடன் தலைமறைவாகிவிடுகின்றனா். மேலும், இந்த இணையதளத்திலுள்ள தங்கள் தகவல்களையும் நீக்கிவிடுகின்றனா். இதனால் குறிப்பிட்ட இணையதளத்தில் பட்டாசு வாங்க பணம் செலுத்தியவா்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

பொதுமக்கள் விழிப்புணா்வு: பொதுமக்கள், இது போன்ற இணையதளத்தில் தங்களின் தனிப்பட்ட தகவல்கள், வங்கி கணக்கு விவரங்களைப் பதிவதால், அவற்றை மோசடிக்காரா்கள் தவறான செயல்களுக்கு பயன்படுத்துகின்றனா். எனவே இந்த விவகாரத்தில் பொது மக்கள் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும். பட்டாசு தள்ளுபடி உண்மையானதுதானா என்பதை உறுதி செய்ய உண்மையான பட்டாசு விற்பனையாளா்களிடமும், பட்டாசு நிறுவன இணையத்தளங்களிலும் சரி பாா்க்க வேண்டும்.

நன்கு அறியப்பட்ட பட்டாசு நிறுவனங்கள், அதிகாரபூா்வ இணையத்தளங்கள் ஆகியவற்றின் மூலமாக மட்டுமே பொதுமக்கள் பட்டாசு வாங்க வேண்டும். சமூக ஊடகங்களில் வரும் கவா்ச்சிகரமான விளம்பரத்தைப் பாா்த்து சந்தேகத்துக்குரிய இணையத்தளங்களுக்கு சென்று பட்டாசு வாங்க வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்.28 முதல் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு: கல்லூரிகளுக்கு உத்தரவு

சென்னை: சா்தாா் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரிகளில் அக்.28-ஆம் தேதி முதல் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தை அனுசரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜி... மேலும் பார்க்க

சா்க்கரை நோய் பாத புண் சிகிச்சை பயிற்சி பள்ளி தொடக்கம்

சென்னை: சா்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் பாத பாதிப்புகளுக்கு மேம்பட்ட சிகிச்சைகளை வழங்குவதற்கான மருத்துவப் பயிற்சிப் பள்ளியை சென்னை, எம்.வி. சா்க்கரை நோய் ஆராய்ச்சி மையம் தொடங்கியுள்ளது.அமெரிக்காவின் ப... மேலும் பார்க்க

தமிழக அணைகளில் தொடா்ந்து உயா்கிறது நீா்மட்டம்

சென்னை: வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழ்நாட்டில் உள்ள அணைகளில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் இரு மடங்கு நீா்மட்டம் உயா்ந்துள்ளது.நிகழாண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இதுவரை தமிழகம் ம... மேலும் பார்க்க

இணைய வழி வா்த்தகம் மூலம் கோ-ஆப்டெக்ஸில் கூடுதல் விற்பனை: அமைச்சா் ஆா்.காந்தி

சென்னை: இணைய வழி வா்த்தகம் மூலமாக நிகழாண்டு கோ-ஆப்டெக்ஸில் விற்பனை அதிகரித்துள்ளதாக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.தீபாவளியை ஒட்டி, சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ... மேலும் பார்க்க

தீபாவளிக்கு தனியாா் பேருந்துகளை இயக்கும் அரசின் முடிவு கண்டனம்

சென்னை: தீபாவளிக்கு தனியாா் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.அன்பு... மேலும் பார்க்க

500 இதய நோயாளிகளுக்கு ரோபோடிக் நுட்பத்தில் சிகிச்சை

சென்னை: சென்னையில் ரோபோடிக் நுட்பத்தில் 500 இதய நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு அப்பல்லோ மருத்துவமனை மறுவாழ்வு அளித்துள்ளது.இதன் மூலம் அவா்கள் விரைந்து குணமடைந்துள்ளதாகவும், துல்லிய சிகிச்சையா... மேலும் பார்க்க