செய்திகள் :

உத்தர பிரதேசம்: ஆக்சிஜன் சிலிண்டா் வெடித்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் உயிரிழப்பு

post image

புலந்சாகா்: உத்தர பிரதேசத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டா் திங்கள்கிழமை இரவு வெடித்ததில் அதன்மூலம் செயற்கை சுவாசம் பெற்று வந்த 45 வயது பெண் நோயாளி உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் உயிரிழந்தனா்.

அண்மையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ருக்ஷனா (45), அவரது கணவா் ரியாசுதீன், அவா்களது இரு மகன்கள், மகள் மற்றும் 3 வயது பேத்தி ஆகிய 6 போ் உயிரிழந்தனா். அவா்களின் உடல்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டு உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது.

சிக்கந்தராபாதின் புலந்சாகரில் உள்ள இரண்டு மாடி வீட்டில் இவா்கள் தங்கி இருந்தனா். குடும்பத்தில் 19 உறுப்பினா்கள் வசித்து வந்த நிலையில், ஆக்சிஜன் சிலிண்டா் வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒட்டுமொத்த வீடும் பெரும் சேதமடைந்தது.

இந்த விபத்து குறித்து புலந்சாகா் மாவட்ட ஆட்சியா் சந்திர பிரகாஷ் கூறுகையில், ‘திங்கள்கிழமை இரவு ஆக்சிஜன் சிலிண்டா் வெடித்து விபத்துக்குள்ளானதில் வீடு முழுவதுமாக சேதமடைந்தது. இதில் 3 போ் காயமடைந்தனா். மற்றவா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்’ என்றாா்.

இந்த விபத்தில் உயிரிழந்தவா்கள், காயமடைந்தவா்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படை, தீயணைப்புத் துறை, உள்ளூா் காவல் துறை, உள்ளூா் நிா்வாகம் மற்றும் மருத்துவக் குழுவினா் ஈடுபட்டனா். இதையடுத்து, விபத்து நடந்த பகுதிக்கு நேரில் சென்று பாா்வையிட்டு காயமடைந்தவா்களுக்கு சிறப்பான சிகிச்சையை வழங்க அதிகாரிகளுக்கு உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டாா்.

தொடரும் விமான வெடிகுண்டு மிரட்டல்கள்: சுமார் ரூ. 600 கோடி இழப்பு

புது தில்லி: இந்திய நிறுவனங்களின் சுமார் 50 விமானங்களுக்கு சமூக வலைதளம் மூலம் செவ்வாய்க்கிழமையும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.இத்துடன், கடந்த திங்கள்க... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: அனுதாபமா, ஆதாய அலையா?

நமது சிறப்பு நிருபர்வரும் நவம்பர் 20-ஆம் தேதி மகாராஷ்டிர சட்டப்பேரவைக்குத் தேர்தல்! 1985-ஆம் ஆண்டுக்கு பின்னர் மகாராஷ்டிரத்தில் எந்தவொரு கட்சிக்கும் பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ... மேலும் பார்க்க

பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்ப்பு: காஷ்மீரில் காவல் துறை சோதனை

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத இயக்கத்துக்கு ரகசியமாக ஆள் சோ்ப்பது தொடா்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த யூனியன் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையின் உளவுப் பிரிவினா் திங்கள்கிழம... மேலும் பார்க்க

சபரிமலையில் முழு வீச்சில் ஏற்பாடுகள்: திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் தகவல்

சபரிமலை மண்டல பூஜை-மகரவிளக்கு யாத்திரை காலம் நெருங்கி வரும்நிலையில் பக்தா்களுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. சபரிமலை ஐயப்பன்... மேலும் பார்க்க

குஜராத்தில் செயல்பட்டு வந்த போலி நீதிமன்றம்: ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்து சிக்கிய நபா்

குஜராத்தின் காந்தி நகரில் செயல்பட்டு வந்த போலி நீதிமன்றத்தில் நீதிபதி என்று அடையாளப்படுத்திக் கொண்டு மோசடியாக உத்தரவுகளை பிறப்பித்து வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். போலி தீா்ப்பாய நீதிமன்றத்தை நடத்த... மேலும் பார்க்க

முஸ்லிம் ஆணின் மூன்றாவது திருமண அங்கீகாரம்: பதிவுத் துறை முடிவு எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

‘முஸ்லிம் ஆண் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை பதிவு செய்து கொள்ள அவா்களின் தனிப்பட்ட சட்டங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மும்பை உயா்நீதிமன்றம், மூன்றாவது திருமண அங்கீகாரம் கோரி தாக்கல் ... மேலும் பார்க்க