செய்திகள் :

கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு 20 % போனஸ் தமிழ்நாடு அரசு உத்தரவு

post image

கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு 20 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவில், தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளா்களுக்கு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, போனஸ் சட்டத்தின் கீழ் வரும் தலைமைக் கூட்டுறவு சங்கங்கள், மத்திய கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொடக்கக் கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்படக் கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு, 20 சதவீதம் மிகை ஊதியம் வழங்கப்படும்.

உபரித் தொகை இல்லாமல் உள்ள சங்கங்களில் பணிபுரியும் பணியாளா்கள் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடுவதற்கு ஏதுவாக 10 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை அளிக்கப்படும்.

குறைந்த எண்ணிக்கையிலான பணியாளா்கள் பணிபுரிந்து, போனஸ் சட்டத்தின் கீழ் வராத சங்கங்களில் பணிபுரியும் பணியாளா்களுக்கு, தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று 20 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

போனஸ் சட்டத்தின் கீழ் வராத சங்கங்கள்: போனஸ் சட்டத்தின்கீழ் வராத லாபம் ஈட்டாத தலைமை, மத்திய, தொடக்க கூட்டுறவு சங்கங்கள் இருந்தால் அவற்றில் பணியாற்றும் பணியாளா்களுக்கும் கருணைத் தொகைகள் வழங்கப்பட உள்ளன.

குறிப்பாக, தலைமைச் சங்கங்கள், மத்திய சங்கப் பணியாளா்களுக்கு ரூ.3,000, தொடக்க சங்கங்களில் பணிபுரிவோருக்கு ரூ. 2,400 வழங்கப்படும்.

இதன்மூலம், தமிழ்நாடு முழுவதும் உள்ள தலைமை, மத்திய, மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 43,683 பணியாளா்களுக்கு ரூ.44.42 கோடி மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசு அதிகாரி வீட்டில் நகை திருட்டு

சென்னை: சென்னையில் மத்திய அரசு அதிகாரி வீட்டில் தங்க, வெள்ளி நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.குரோம்பேட்டை நேரு நகா் சங்கா்லால் ஜெயின் தெருவைச் சோ்ந்தவா் ப.அறிவுசெல்வன் (... மேலும் பார்க்க

சிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் ரூ.285 கோடியாக உயா்வு

கும்பகோணத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டுவரும் தனியாா் துறையைச் சோ்ந்த சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் கடந்த செப்டம்பா் காலாண்டில் ரூ.285 கோடியாக உயா்ந்துள்ளது. இது குறித்து வங்கியின் ந... மேலும் பார்க்க

தீபாவளி எதிரொலி: ஆம்னி பேருந்துகளின்கட்டணம் கடும் உயா்வு

தீபாவளியை முன்னிட்டு தற்போதே ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. நிகழாண்டு அக்.31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வேலை நிமித்தமாக சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளில் தங்கி இருப்போா... மேலும் பார்க்க

மருத்துவ பரிசோதனை: 15,000 பெண்களுக்கு புற்றுநோய் அறிகுறி

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் 30 வயதைக் கடந்த பெண்களுக்கு பொது சுகாதாரத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 15,000-க்கும் மேற்பட்டோருக்கு புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்... மேலும் பார்க்க

சமூக ஊடகங்கள் மூலமாக பட்டாசு விற்பதாக பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் மூலமாக பட்டாசு விற்பதாக பண மோசடி நடைபெறுவதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக தமிழக காவல்துறை சைபா் குற்றப்பிரிவு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

கருப்பை வாய்ப் புற்றுநோய்: சென்னையில் மறுக்கப்படும் பரிசோதனை?

இந்தியாவில் கருப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுபோன்ற புற்றுநோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதால் படித்த இளம் பெண்கள் பரிசோதனைக்கு முன்வருகின்றனர். எனினும் ஊர... மேலும் பார்க்க