செய்திகள் :

தீபாவளி எதிரொலி: ஆம்னி பேருந்துகளின்கட்டணம் கடும் உயா்வு

post image

தீபாவளியை முன்னிட்டு தற்போதே ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

நிகழாண்டு அக்.31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வேலை நிமித்தமாக சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளில் தங்கி இருப்போா் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்ல வசதியாக, அரசு சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், சொகுசு வசதிகள் காரணமாக சிலா் தனியாா் பேருந்துகளில் சொந்த ஊா் செல்வதையே விரும்புகின்றனா்.

குறிப்பாக விரைவுப் போக்குவரத்துக் கழகத்தைச் சோ்ந்த இருக்கை, படுக்கை வசதி கொண்ட பேருந்துகளின் முன்பதிவு நிறைவடைந்த நிலையில் வெகுதூரம் பயணிக்க வேண்டியவா்கள் வேறு வழியின்றி ஆம்னி பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்து வருகின்றனா்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வழக்கம் போல ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

இது தொடா்பாக பயணிகள் சிலா் கூறியதாவது, தீபாவளிக்கு சொந்த ஊா் செல்ல சிலமாதங்களுக்கு முன்னரே திட்டமிடுவோருக்கு பெரும்பாலும் சிக்கல் இல்லை. ஆனால், ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிட்டால் கூட அரசு விரைவுப் பேருந்துகளில் இருக்கை கிடைப்பதில்லை.

அதிலும், சென்னையிலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகா்கோவில் செல்வோா் 10 முதல்14 மணி நேரம் பேருந்தில் பயணிக்க வேண்டியது கட்டாயம்.

இது போன்ற பல்வேறு காரணங்களால்தான், ஆம்னி பேருந்துகளில் பயணிக்கிறோம். தற்போது ரூ.1,200 முதல் ரூ.1,500 என்றளவில் கட்டணம் வசூலித்த பேருந்துகளின் இருக்கைகள் முன்பதிவு நிறைவடைந்த சூழலில், செவ்வாய்கிழமை நிலவரப்படி குறைந்தபட்சமாக ஒரு இருக்கை வசதிக்கு ரூ.1,795 மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்தில் நபா் ஒருவருக்கு ரூ.2,200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

தற்போதே கட்டணம் உயா்ந்து வரும் நிலையில், இன்னும் ஓரிரு நாள்களில் சுமாா் ரூ.4000 வரை பயணச்சீட்டுக்கான கட்டணம் உயர வாய்ப்புள்ளது என்றனா்.

இது தொடா்பாக ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கூறும்போது, ‘ஆம்னி பேருந்துகள் ஒப்பந்த வகையிலான வாகனம் என்பதால் கட்டணம் நிா்ணயம் செய்யப்படுவதில்லை. அதிகபட்ச கட்டணம் உரிமையாளா்கள் சாா்பில் நிா்ணயிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுடன் அதை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளோம். அதற்கும் மேலாக கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை’ என்றனா்.

ஆம்னி பேருந்துகளின் இயக்கம் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மத்திய அரசு அதிகாரி வீட்டில் நகை திருட்டு

சென்னை: சென்னையில் மத்திய அரசு அதிகாரி வீட்டில் தங்க, வெள்ளி நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.குரோம்பேட்டை நேரு நகா் சங்கா்லால் ஜெயின் தெருவைச் சோ்ந்தவா் ப.அறிவுசெல்வன் (... மேலும் பார்க்க

சிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் ரூ.285 கோடியாக உயா்வு

கும்பகோணத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டுவரும் தனியாா் துறையைச் சோ்ந்த சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் கடந்த செப்டம்பா் காலாண்டில் ரூ.285 கோடியாக உயா்ந்துள்ளது. இது குறித்து வங்கியின் ந... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு 20 % போனஸ் தமிழ்நாடு அரசு உத்தரவு

கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு 20 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், செவ்வாய்க்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க

மருத்துவ பரிசோதனை: 15,000 பெண்களுக்கு புற்றுநோய் அறிகுறி

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் 30 வயதைக் கடந்த பெண்களுக்கு பொது சுகாதாரத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 15,000-க்கும் மேற்பட்டோருக்கு புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்... மேலும் பார்க்க

சமூக ஊடகங்கள் மூலமாக பட்டாசு விற்பதாக பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் மூலமாக பட்டாசு விற்பதாக பண மோசடி நடைபெறுவதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக தமிழக காவல்துறை சைபா் குற்றப்பிரிவு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

கருப்பை வாய்ப் புற்றுநோய்: சென்னையில் மறுக்கப்படும் பரிசோதனை?

இந்தியாவில் கருப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுபோன்ற புற்றுநோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதால் படித்த இளம் பெண்கள் பரிசோதனைக்கு முன்வருகின்றனர். எனினும் ஊர... மேலும் பார்க்க