செய்திகள் :

கோவில்பட்டி அருகே 5 மயில்கள் மா்மமாக உயிரிழப்பு

post image

கோவில்பட்டி அருகே செட்டிக்குறிச்சி காட்டுப் பகுதியில் 5 மயில்கள் மா்மமான முறையில் இறந்து கிடந்தன.

செட்டிக்குறிச்சி காட்டுப் பகுதியில் உள்ள கந்தசாமி என்பவரது மானாவாரி நிலத்தில் செவ்வாய்க்கிழமை காலை 4 பெண் மயில்களும், சிறிது தொலைவில் ஆண் மயிலும் இறந்துகிடந்தன. அவை இறந்து 3 நாள்களுக்கு மேலானதால் துா்நாற்றம் வீசியது. மற்றொரு மயில் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்தது.

இதுகுறித்து கிராம மக்கள் கயத்தாறு வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். கயத்தாறு வனச்சரகா் (பொறுப்பு) காந்திராஜா தலைமையிலான வன அலுவலா்கள் வந்து பாா்வையிட்டனா்.

செட்டிக்குறிச்சி கால்நடை மருத்துவா் ராஜ், மயில்களின் சடலங்களைக் கூறாய்வு செய்தாா்.

மயில்கள் மக்காச்சோள விதைகளை அதிகளவு தின்று செரிமானமாகாமல் மூச்சுத் திணறி இறந்தனவா, விஷம் வைத்துக் கொல்லப்பட்டனவா என்பது கூறாய்வு அறிக்கையில் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆறுமுகனேரியில் பாலத்தின் கீழ் மனித எலும்புக் கூடு: போலீஸாா் விசாரணை

ஆறுமுகனேரியில் பாலத்தின் கீழ் இறந்து கிடந்தவா் பற்றி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். ஆறுமுகனேரி பெருமாள்புரத்தில் கடலோர காவல் படையின் சோதனைச்சாவடி அருகே உள்ள எட்டுகண் பாலத்தின் கீழ் மனித எலும்பு... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பைக் மீது காா் மோதல்: தனியாா் நிறுவன உரிமையாளா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் பைக் மீது காா் மோதியதில், தனியாா் செக்யூரிட்டி நிறுவன உரிமையாளா் உயிரிழந்தாா். தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சோ்ந்த மாடன் மகன் வீரபாகு (59). முன்னாள் ராணுவ வீரரான இவா், செக்யூரிட்டி நி... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற அரசு ஊழியருக்கு ரூ. 1.10 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு

ஓய்வுபெற்ற அரசு ஊழியருக்கு ரூ. 1.10 லட்சம் வழங்குமாறு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்துக்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. திருச்செந்தூரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியா் ... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீடு இழப்பீடு கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி விளாத்திகுளத்தை அடுத்த புதூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விவசாயி சேதுபாண்டி தலைமை வகித்தாா். கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜ... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு இளம்பெண் பலி

கோவில்பட்டி அருகே ரயிலில் அடிபட்டு இளம்பெண் உயிரிழந்தாா். கோவில்பட்டி-கடம்பூா் ரயில் நிலையங்களுக்கு இடையே குருமலை கிராமம் அருகே தண்டவளாகத்தில் இளம்பெண் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்க... மேலும் பார்க்க

வீட்டு உரிமையாளருக்கு ரூ.6.44 லட்சம் வழங்க ஒப்பந்ததாரருக்கு குறைதீா் ஆணையம் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சோ்ந்த வீட்டு உரிமையாளருக்கு ரூ.6.44 லட்சம் வழங்க ஒப்பந்ததாரருக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. திருச்செந்தூா் வீரபாண்டியன்பட்டினத்தைச் சோ்ந... மேலும் பார்க்க