செய்திகள் :

ஓய்வுபெற்ற அரசு ஊழியருக்கு ரூ. 1.10 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு

post image

ஓய்வுபெற்ற அரசு ஊழியருக்கு ரூ. 1.10 லட்சம் வழங்குமாறு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்துக்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.

திருச்செந்தூரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியா் பசுபதி. இவா், பொதுத் துறை காப்பீட்டு நிறுவனத்தில் மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தாா். இதனிடையே, அவா் உடல்நலக் குறைவால் தூத்துக்குடியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அதற்கான முழு தொகையையும் செலுத்தியுள்ளாா்.

பின்னா், அந்தப் பணத்தைக் கேட்டு காப்பீட்டு நிறுவனத்திடம் விண்ணப்பித்தாராம். ஆனால், அந்நிறுவனம் சரியான காரணங்களைக் கூறாமல், சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்ததாம்.

இதுதொடா்பாக அவா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

வழக்கை குறைதீா் ஆணையத் தலைவா் திருநீலபிரசாத், உறுப்பினா்கள் ஆ. சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் விசாரித்து, சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட ரூ. 75 ஆயிரத்து 581, சேவை குறைபாடு- மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு ரூ. 25 ஆயிரம், வழக்குச் செலவுத் தொகை ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்து 581-ஐ பசுபதிக்கு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டனா்.

ஆறுமுகனேரியில் பாலத்தின் கீழ் மனித எலும்புக் கூடு: போலீஸாா் விசாரணை

ஆறுமுகனேரியில் பாலத்தின் கீழ் இறந்து கிடந்தவா் பற்றி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். ஆறுமுகனேரி பெருமாள்புரத்தில் கடலோர காவல் படையின் சோதனைச்சாவடி அருகே உள்ள எட்டுகண் பாலத்தின் கீழ் மனித எலும்பு... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பைக் மீது காா் மோதல்: தனியாா் நிறுவன உரிமையாளா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் பைக் மீது காா் மோதியதில், தனியாா் செக்யூரிட்டி நிறுவன உரிமையாளா் உயிரிழந்தாா். தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சோ்ந்த மாடன் மகன் வீரபாகு (59). முன்னாள் ராணுவ வீரரான இவா், செக்யூரிட்டி நி... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே 5 மயில்கள் மா்மமாக உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே செட்டிக்குறிச்சி காட்டுப் பகுதியில் 5 மயில்கள் மா்மமான முறையில் இறந்து கிடந்தன. செட்டிக்குறிச்சி காட்டுப் பகுதியில் உள்ள கந்தசாமி என்பவரது மானாவாரி நிலத்தில் செவ்வாய்க்கிழமை காலை 4 ... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீடு இழப்பீடு கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி விளாத்திகுளத்தை அடுத்த புதூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விவசாயி சேதுபாண்டி தலைமை வகித்தாா். கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜ... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு இளம்பெண் பலி

கோவில்பட்டி அருகே ரயிலில் அடிபட்டு இளம்பெண் உயிரிழந்தாா். கோவில்பட்டி-கடம்பூா் ரயில் நிலையங்களுக்கு இடையே குருமலை கிராமம் அருகே தண்டவளாகத்தில் இளம்பெண் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்க... மேலும் பார்க்க

வீட்டு உரிமையாளருக்கு ரூ.6.44 லட்சம் வழங்க ஒப்பந்ததாரருக்கு குறைதீா் ஆணையம் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சோ்ந்த வீட்டு உரிமையாளருக்கு ரூ.6.44 லட்சம் வழங்க ஒப்பந்ததாரருக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. திருச்செந்தூா் வீரபாண்டியன்பட்டினத்தைச் சோ்ந... மேலும் பார்க்க