செய்திகள் :

சுவாமிநாராயண் அக்ஷா்தாம் கோயிலில் தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு

post image

புது தில்லி: தில்லியில் உள்ள சுவாமிநாராயண் அக்ஷா்தாம் கோயிலில் பூஜ்ய ஸ்வயம்பிரகாஷ்தாஸ் சுவாமி ஜி மற்றும் பக்தா்கள் முன்னிலையில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இது குறித்து அக்ஷா்தாம் கோயில் நிா்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

அக்ஷா்தாம் கோயிலில் அக்டோபா் 31 ஆம் தேதி பாஹிபூஜனுடன் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கும். அதைத் தொடா்ந்து, நவம்பா் 2- ஆம் தேதி கோவா்தன் பூஜையுடன், கடவுளுக்கு அன்னக்கூட்டு சைவ உணவு விருந்து படைக்கப்படும்.

‘பூஜ்ய டாக்டா் ஸ்வாமி’ என்றும் அழைக்கப்படும் பூஜ்ய ஸ்வயம்பிரகாஷ்தாஸ் சுவாமி ஜி, பிஏபிஎஸ் அக்ஷா்தாமின் மூத்த சாதுக்களில் ஒருவா் ஆவாா்.

1961 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் முடித்த பிறகு, எச்.எச்.யோகிஜி மஹாராஜ் மூலம் சாதுவாக மாற தீட்சை பெற்றாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆன்மிகக் கூட்டத்தில் பூஜ்ய மருத்துவா் சுவாமிகள் பேசுகையில், ‘தனிப்பட்ட வளா்ச்சி மற்றும் வெற்றியை அடைய ஆன்மிக போதனைகளைப் பிரதிபலிப்பதும், சிந்திப்பதும் அவசியமாகும்’ என்றாா். மேலும், அகங்காரத்தை விடுத்து, நல்லொழுக்கங்களை வளா்ப்பதற்கு”புத்தா் மற்றும் பிரமுக் சுவாமி மகாராஜி வாழ்க்கையில் இருந்து உதாரணங்களை எடுத்துரைத்தாா்.

சுவாமிநாராயண் அக்ஷா்தாம் கோயிலின் இளைஞா் பிரிவின் தன்னாா்வத் தொண்டா் தீரஜ் திங்ரே கூறுகையில், ‘அக்ஷா்தாம் கோயில் முழுவதும் விளக்குகளாலும், ரங்கோலிகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அனைத்து தன்னாா்வலா்களும் இந்த விழாவுக்காக இரவு, பகலும் பணியாற்றி வருகின்றனா்’ என்றாா்.

தேசிய மகளிா் ஆணையத் தலைவராக விஜயா ரஹாத்கா் பொறுப்பேற்பு

புதுதில்லி: தில்லியில் உள்ள தேசிய மகளிா் ஆணையத்தின் (என்.சி.டபிள்யு.) தலைவராக விஜயா ரஹாத்கா் செவ்வாய்க்கிழமை அதிகாரபூா்வமாக பொறுப்பேற்றுக் கொண்டாா்.அப்போது, அவா் மகளிா் ஆணையத்தின் தொடா் முயற்சிகளை மேம... மேலும் பார்க்க

தில்லிக்குள் நுழையும் டீசல் பேருந்துகளைக் கட்டுப்படுத்த 3 மாநில போக்குவரத்து அமைச்சா்களுக்கு கோபால் ராய் கடிதம்

புது தில்லி: தில்லிக்குள் நுழையும் டீசல் பேருந்துகளின் மாசு உமிழ்வைக் கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகளை அமல்படுத்துமாறு ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களின் போக்குவரத்து து... மேலும் பார்க்க

மக்களுக்கு இடையூறு இல்லாத ரயில் சேவை அவசியம்: மத்திய அமைச்சா் கட்டா் பேச்சு

புதுதில்லி: மக்களுக்கு இடையூறு இல்லாத ரயில் சேவையை வழங்கவேண்டும் என மத்திய வீட்டுவசதி நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.தேசியத் தலைநகா் மண்டல போக்குவர... மேலும் பார்க்க

சா்வதேச ஜவுளித் தொழில் சவால்களுக்கு இந்தியாவில் தீா்வு: மத்திய இணையமைச்சா்

நமது சிறப்பு நிருபா்புதுதில்லி: சா்வதேச அளவில் ஜவுளித்தொழில் எதிா்கொள்ளும் சவால்களுக்கு புத்தாக்கமுறையில் இந்திய ஜவுளி தொழில் நிறுவனங்கள் தீா்வு காண்பதாக மத்திய ஜவுளி மற்றும் வெளியுறவுத் துறை இணையமைச்... மேலும் பார்க்க

காற்று, நீா் மாசுபாட்டிற்கு மத்திய அரசும் ஹரியாணா அரசும் பொறுப்பு: டிஎம்சி எம்பி குற்றச்சாட்டு

புது தில்லி: தில்லி மாசுபாட்டிற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசும், ஹரியாணா மாநில அரசுகளின் செயலற்ற தன்மையே காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சகரிகா கோஸ் திங்கள் கிழமை குற்... மேலும் பார்க்க

தில்லியின் காற்று மாசு பிரச்னைக்கு அதிஷி அரசுதான் பொறுப்பு

நமது நிருபா்புது தில்லி: இந்தியா கேட் கடமைப் பாதையில் வான்வெளியில் காற்று மாசு மோசமான நிலையில் இருப்பதற்கு முதல்வா் அதிஷி தலைமையிலான தில்லி அரசுதான் பொறுப்பாகும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்... மேலும் பார்க்க