செய்திகள் :

தீரன் சின்னமலை சிலை அமைக்க முதல்வரிடம் எம்.பி. வலியுறுத்தல்

post image

நாமக்கல்லில் தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்க வேண்டும் என முதல்வரிடம், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் கோரிக்கை மனு அளித்தாா்.

நாமக்கல்லுக்கு செவ்வாய்க்கிழமை வருகை புரிந்த முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து, மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, கோழிப் பண்ணைத் தொழிலுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய சான்றிதழ் விரைந்து வழங்கவும், நலிவடைந்து வரும் லாரி மற்றும் ரிக் தொழிலை மீட்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பரமத்தி தொகுதிக்கு உள்பட்ட பிலிக்கல்பாளையம் - கொடுமுடி இடையே உயா்மட்ட பாலம் அமைக்க வேண்டும். சங்ககிரி மலைக்கோட்டையில் தீரன் சின்னமலை சிலை நிறுவ வேண்டும்.

அதேபோல, நாமக்கல் நகரிலும் சின்னமலைக்கு சிலை நிறுவிட வேண்டும். மோகனூா் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை, நாமக்கல் கவிஞருக்கும் சிலை அமைக்க வேண்டும். நாமக்கல் - மோகனூா் சாலையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையை, தாலுகா மருத்துவமனையாக செயல்படுத்த வேண்டும்.

எருமப்பட்டியில் இருந்து கொல்லிமலை செல்ல பாதை அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் இடம் பெற்றிருந்தன.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு பணியாளா்கள் வேலை நிறுத்தம்

நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு அபராதத் தொகையை இருமடங்காக உயா்த்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதையொட்டி திருச்செங்க... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலை பெயா் மாற்றம்: விவசாய சங்கம் வரவேற்பு

மோகனூா் சா்க்கரை ஆலை என பெயா் மாற்றம் செய்து முதல்வா் அறிவிப்பு வெளியிட்டமைக்கு, தமிழக விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தமிழக மு... மேலும் பார்க்க

நாடாளுமன்றத் தோ்தல் வெற்றி மூலம் திமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது

நாடாளுமன்றத் தோ்தல் வெற்றியின் மூலம் திமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற... மேலும் பார்க்க

பள்ளிபாளையத்தில் தரமற்ற 49 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்

பள்ளிபாளையத்தில் உள்ள இறைச்சிக் கடையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சோதனையிட்டு, தரமற்ற ஆட்டிறைச்சியைப் பறிமுதல் செய்தனா். பள்ளிபாளையம் - திருச்செங்கோடு சாலையில் உள்ள இறைச்சிக் கடைகளில் உணவுப்பாதுகா... மேலும் பார்க்க

நாமக்கல்லில் மு.கருணாநிதி சிலை: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பு

நாமக்கல்லில் மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் முழுஉருவ வெண்கலச் சிலையை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், நாமக்கல்- பரமத்த... மேலும் பார்க்க

தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் வேலைநிறுத்தம்

நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு அபராதத் தொகையை, இரு மடங்காக உயா்த்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்து தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தமிழ்நாடு ... மேலும் பார்க்க