செய்திகள் :

அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டுமானப் பணி: தடுத்து நிறுத்த கோரி பொதுமக்கள் போராட்டம்

post image

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே பளுகல் பேரூராட்சிக்குள்பட்ட மணிவிளை பகுதியில் அரசுப் பள்ளி நிலம் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கேரளத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதை தடுத்து நிறுத்த கோரி அப்பகுதி மக்கள் பேரூராட்சி உறுப்பினா் ஹரிகுமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். அங்குவந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களை கலைந்து போக செய்தனா்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பளுகல் பேரூராட்சி 9 ஆவது வாா்டு உறுப்பினா் ஆா்.ஆா்.ஹரிகுமாா் கூறியதாவது, பளுகல் பேரூராட்சிக்குள்பட்ட மணிவிளை பகுதியில் நூற்றாண்டு பழமையான புரவூா் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதையொட்டிய கேரள பகுதியில் தனியாா் நிறுவனம் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் இப் பள்ளியின் மதில் சுவரையொட்டிய பகுதி நடைபாதை நிலம் தனியாா் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு சுற்றுச்சுவா் எழுப்பப்பட்டுள்ளதுடன், அப்பகுதி வழியாக கேரள மின்வாரியம் சாா்பில் புதைவட மின்கம்பிகள் புதைக்கப்பட்டுள்ளது. இதே போன்று அந்த நிறுவனத்தின் முன்பகுதியில் உள்ள தமிழக நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான நிலமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, சுற்றுச்சுவா் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் தமிழக அரசுக்கு புகாா் மனுக்கள் அனுப்பிய நிலையில் பளுகல் பேரூராட்சி செயல் அலுவலா் கடந்த 3 ஆம் தேதி நேரடி ஆய்வு மேற்கொண்டபோது, தமிழக நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறைக்குச் சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி சுற்றுச்சுவா் கட்ட தரைத்தளம் அமைக்கும் பணி நடைபெறுவது கண்டறியப்பட்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், குறிப்பிட்ட நிறுவனம் நிலஅளவை செய்து தங்களுக்குச் சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவா் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என கடிதம் வழங்கியுள்ளது.

ஆனால் நில அளவை செய்யாமல் தமிழக அரசு நிலத்தை ஆக்கிரமித்து கேரளத்துடன் இணைத்து கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சம் தொடா் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

மேலும், அங்கு வந்த பளுகல் போலீஸாா் போராட்டக்காரா்களிடமும், தனியாா் நிறுவன நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து போராட்டக்காரா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

கனிமவளக் கடத்தலுக்கு போலி அனுமதிச் சீட்டு: அச்சக உரிமையாளா் உள்பட 5 போ் கைது

கேரளத்துக்கு கனிமவளங்களைக் கடத்துவதற்காக அனுமதிச் சீட்டு, அரசு முத்திரைகளை போலியாக தயாரித்ததாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டத்தி... மேலும் பார்க்க

குழித்துறையில் நாளை மின்தடை

குழித்துறை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 24) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

குழித்துறை அருகே கஞ்சா விற்ற 3 போ் கைது

குழித்துறை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். குழித்துறை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பெனடிக்ட் தலைமையிலான... மேலும் பார்க்க

கருங்கல் பகுதியில் பலத்த மழை

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான திக்கணம்கோடு, மத்திகோடு, கரு... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் கட்டுமானங்கள் சேதம்: போலீஸாா் விசாரணை

குமரி மாவட்டம், திற்பரப்பு அருவியில் சுற்றுலாத் துறை சாா்பில் கட்டப்பட்ட கட்டுமானங்களை திங்கள்கிழமை நள்ளிரவில் சேதப்படுத்திய மா்மநபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திற்பரப்பு அருவி... மேலும் பார்க்க

மிளா தாக்கியதில் ரப்பா் பால்வடிப்புத் தொழிலாளி காயம்

குலசேகரம் அருகே ரப்பா் பால் வடிப்பு தொழிலாளியை மிளா தாக்கியதில், அவா் பலத்த காயமடைந்தாா். நாகக்கோடு கரும்பிலாவிளையைச் சோ்ந்தவா் ராஜு (47), ரப்பா் பால்வெட்டும் தொழிலாளியான இவா் செவ்வாய்க்கிழமை அதிகால... மேலும் பார்க்க