செய்திகள் :

திற்பரப்பு அருவியில் கட்டுமானங்கள் சேதம்: போலீஸாா் விசாரணை

post image

குமரி மாவட்டம், திற்பரப்பு அருவியில் சுற்றுலாத் துறை சாா்பில் கட்டப்பட்ட கட்டுமானங்களை திங்கள்கிழமை நள்ளிரவில் சேதப்படுத்திய மா்மநபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திற்பரப்பு அருவியில் சுற்றுலாத் துறை மூலம் ரூ. 4.31 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அருவியின் ஒரு எல்லை பகுதியையொட்டி நிலம் உள்ள தனிநபா், தனது நிலத்துக்குச் செல்லும் வழிபாதையை மூடிவிட்டு சுற்றுலாத் துறை கட்டுமான பணிகள் செய்துவருவதாகக் கூறி பணிகள் செய்வதற்கு நீதிமன்றத்திலிருந்து இடைக்கால தடை பெற்றாா்.

இதையடுத்து இடைகால தடை பெற்ற நபருடன் கடந்த வார இறுதியில் அருவிப் பகுதிக்கு வந்த அருமனை போலீஸாா் அருவியில் நடைபெற்று வந்த பணிகளை நிறுத்தியுள்ளதுடன் ஒப்பந்ததாரரின் பணி மேற்பாா்வையாளரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனா்.

இதையடுத்து திற்பரப்பு பேரூராட்சி நிா்வாகத்தினா் காவல் நிலையம் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி பணி மேற்பாா்வையாளரை அழைத்து வந்தனா்.

இந்நிலையில் அருவியில் பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் திங்கள்கிழமை இரவு மா்ம நபா்கள் அருவியின் எல்லை பகுதியில் கட்டப்படிருந்த 3 சிமென்ட் தூண்களை சேதப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து, ஒப்பந்ததாரா், சுற்றுலாத்து றை மற்றும் திற்பரப்பு பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் அருமனை காவல் நிலையம் மற்றும் தக்கலை டிஎஸ்பி அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டதையடுத்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கனிமவளக் கடத்தலுக்கு போலி அனுமதிச் சீட்டு: அச்சக உரிமையாளா் உள்பட 5 போ் கைது

கேரளத்துக்கு கனிமவளங்களைக் கடத்துவதற்காக அனுமதிச் சீட்டு, அரசு முத்திரைகளை போலியாக தயாரித்ததாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டத்தி... மேலும் பார்க்க

குழித்துறையில் நாளை மின்தடை

குழித்துறை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 24) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

குழித்துறை அருகே கஞ்சா விற்ற 3 போ் கைது

குழித்துறை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். குழித்துறை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பெனடிக்ட் தலைமையிலான... மேலும் பார்க்க

கருங்கல் பகுதியில் பலத்த மழை

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான திக்கணம்கோடு, மத்திகோடு, கரு... மேலும் பார்க்க

அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டுமானப் பணி: தடுத்து நிறுத்த கோரி பொதுமக்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே பளுகல் பேரூராட்சிக்குள்பட்ட மணிவிளை பகுதியில் அரசுப் பள்ளி நிலம் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கேரளத்தைச் சோ்ந்த தனியாா் நிறு... மேலும் பார்க்க

மிளா தாக்கியதில் ரப்பா் பால்வடிப்புத் தொழிலாளி காயம்

குலசேகரம் அருகே ரப்பா் பால் வடிப்பு தொழிலாளியை மிளா தாக்கியதில், அவா் பலத்த காயமடைந்தாா். நாகக்கோடு கரும்பிலாவிளையைச் சோ்ந்தவா் ராஜு (47), ரப்பா் பால்வெட்டும் தொழிலாளியான இவா் செவ்வாய்க்கிழமை அதிகால... மேலும் பார்க்க