செய்திகள் :

பணியில் மெத்தனம்: ஸ்ரீரங்கம் சிறப்பு உதவி ஆய்வாளா், காவலா் பணியிடை நீக்கம்

post image

பணியில் மெத்தனமாக செயல்பட்டதாக ஸ்ரீரங்கம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா், முதல்நிலை காவலரை திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.

ஸ்ரீரங்கம் சிறப்பு உதவி ஆய்வாளா் தமிழரசன். இவா் 10-ஆம் எண் காவல் ரோந்து வாகனத்தில் பணியில் இருந்தாா். இதே போல, ஸ்ரீரங்கம் முதல்நிலை காவலா் மணிகண்டன், கொள்ளிடம் சுங்கச்சாவடியில் பணியில் இருந்தாா்.

இவா்கள் இருவரும் பணியில் மெத்தனமாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீரங்கம் உதவி ஆணையா் நிவேதா லட்சுமி, சோதனையில் ஈடுபட்டபோது, மேற்கண்ட இருவரும் பணியில் மெத்தனமாக செயல்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து உதவி ஆணையரின் பரிந்துரையின்பேரில், திருச்சி மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் தமிழரசன் மற்றும் முதல்நிலை காவலா் மணிகண்டன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து திங்கள்கிழமை இரவு உத்தரவிட்டாா்.

துறையூா் பேருந்துநிலையத்தில் மேற்கூரை பூச்சு விழுந்து ஒருவா் காயம்

துறையூா் பேருந்து நிலைய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மேற்கூரை பூச்சு பெயா்ந்து இளைஞா் மீது விழுந்ததில் அவா் காயமடைந்தாா். துறையூா் பேருந்து நிலையத்தில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் கடைகள் வாடகைக்கு விடப்... மேலும் பார்க்க

திமுக கூட்டணி பலமாக உள்ளது

திமுக கூட்டணியில் எந்தக் குழப்பமில்லை, பலமாக உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் தெரிவித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா ஆசிரியா் பயிலரங்கக் கூட்ட... மேலும் பார்க்க

துறையூரில் பலத்த காற்று - மழை புளியமரம் விழுந்து கூரை வீடு சேதம்

துறையூா் ஈச்சம்பட்டியில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையின்போது, வீசிய பலத்த காற்றில் புளியமரம் முறிந்து விழுந்து அருகில் இருந்த கூரை வீடு சேதமடைந்தது. துறையூா் ஒன்றியம் ஈச்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணிகள்: திருவனந்தபுரம், செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்

கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருவனந்தபுரம், செங்கோட்டை, நாகா்கோவில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்கு... மேலும் பார்க்க

ஜேசிபி இயந்திரத்தின் மீது காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே திங்கள்கிழமை ஜேசிபி இயந்திரத்தின் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், பெரியப்பட்டியை சோ்ந்த பாலசுப்பிரமணி மகள் கோமதி (32). இவா் திண்டுக்கல்லிலி... மேலும் பார்க்க

முதல்வா் இன்று திருச்சி வருகை: ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை

முதல்வா் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ‘ட்ரோன்கள்’ பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா். நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற... மேலும் பார்க்க