Hyundai Motor India பங்கை வைத்துக் கொள்ளலாமா? | SIP முறையில் Public Sector Bank ...
ஏக்தா கபூர் மீது போக்ஸோ வழக்கு..! தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!
தயாரிப்பாளர் ஏக்தா கபூர், அவரது அம்மா ஷோபா கபூர் மீது போக்ஸோ வழக்கு பதியப்பட்டுள்ளது.
காந்தி பாட் என்ற இணையத் தொடரில் குழந்தைகளை தவறாகக் காட்சிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், மும்பை காவல்துறையினர் ஏக்தா கபூரையும் அவரது தாயையும் போக்ஸோ வழக்கில் விசாரித்துள்ளார்கள்.
கந்தி பாட் தொடரில் 6ஆவது சீசனில்தான் இந்தப் பிரச்னை எழுந்துள்ளது. பிப்.2021 - ஏப்.2021 வரை ஆல்ட் பாலாஜி செயலியில் இந்தக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது.
ஓடிடி குறித்த இந்தியாவின் புதிய விதிமுறைகளால் பின்னர் ஜீ5 செயலியில் இருந்தும் நீக்கப்பட்டது. சச்சின் மொஹித் இதை இயக்கியிருந்தார். தற்போது இந்தச் செயலியில் அந்தக் காட்சிகள் ஒளிபரப்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் ஏக்தா கபூரின் தயாரிப்பில் கடைசியாக லவ், செக்ஸ் அர் தோகா 2 படம் ஏப்ரலில் திரையரங்குகளில் வெளியானது. இதனை திபாகர் பானர்ஜி இயக்கியிருந்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப்படம் பெரிதாக வசூலிக்கவில்லை.
இதன் தயாரிப்பு நிறுவனமான ஏஎல்டி பாலாஜி டெலிஃபிலிம்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியதாவது:
கந்தி பாட் இணையத்தொடர் குறித்து பல ஊடகங்களில் வெளிவரும் பிரச்னை குறித்து ஏஎல்டி பாலாஜி டெலிஃபிலிம்ஸ் நிறுவனம் விளக்கமளிக்கிறது. போக்ஸோ உள்பட அனைத்து சட்டத்துக்கும் உள்பட்டே இந்தத் தொடர் எடுக்கப்பட்டது. ஊடகங்கள் தெரிவிக்கும் தகவல் பொய்யானது.
மேலும் குறிப்பாக ஷோபா கபூர், ஏக்தா கபூர் நிறுவனத்தில் தினமும் நடைபெறும் செயல்பாடுகளில் தலையிடுவதில்லை. இதற்கெல்லாம் தனியாக அணிகள் இருக்கின்றன. எந்த வகையான கதையென தேர்வு செய்யவும் தனிக் குழுக்கள் உள்ளன.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம். சட்டத்தின்மீது முழுமையான நம்பிக்கையுள்ளது. வழக்கு முடியாதிருக்கிற நிலையில் இது குறித்து விரிவாக பதிலளிப்பதில் இருந்து தவிர்த்து வருகிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.
பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர் பாலாஜி டெலிஃபிலிம்ஸில், இணை நிர்வாக இயக்குநராகவும் கிரியேட்டிவ் ஹெட்டாகவும் ஏக்தா கபூர் பணியாற்றி வருகிறார்.
நடிகர் ஜிதேந்திராவின் மகளான இவருக்கு இந்த வருடம் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
கரோனா காலத்தில் பாலாஜி டெலிஃபிலிம்ஸ் ஊழியர்களின் நலனுக்காக தன்னுடைய ஒரு வருட சம்பளத்தை வழங்குவதாகப் பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர் கூறியுள்ளார்.
பிரபாஸின் தி ராஜா சாப் டீசர் அப்டேட்!
பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்தார். சலார் படம் கடந்தாண்டு வெளியாகி ரூ.700கோடிக்கும் மேல் வசூலித்தத... மேலும் பார்க்க
சூர்யாவை சந்தித்த அஜித்..! இயக்குநர் சிவா குறித்து அஜித் கூறியதென்ன?
சூர்யா - சிவா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றதால், இப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.நவம்பர் 14 ஆம் தேதி வெளிய... மேலும் பார்க்க
எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை..! தாயின் மறைவு குறித்து கிச்சா சுதீப் உருக்கம்!
நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் வயது முதிர்வு காரணமாக தனது 86ஆவது வயதில் அக்.20ஆம் தேதியன்று காலமானார். இந்த மறைவு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கிச்சா சுதீப் கூறியதாவது: எனது அம்மா, மி... மேலும் பார்க்க
திருமணத்தைவிட வீடுதான் மிகப்பெரிய கனவு..! ஷாலின் ஜோயா!
கேரளத்தில் தொலைக்காட்சிகளில் நடித்து பின்னர் சினிமாவில் நடிகையானவர் ஷாலின் ஜோயா. தமிழில் ராஜ முந்திரி, கண்ணகி ஆகிய படங்களில் நடித்துள்ளார். குக் வித் கோமாளியில் பங்குபெற்ற ஷாலின் ஜோயா மிகவும் புகழ்பெற... மேலும் பார்க்க
‘ஸ்டார் படத்தின் குறைகளைச் சொன்னேன். ஆனால்..’: கவின் பகிர்ந்த அனுபவம்!
நடிகர் கவின் ஸ்டார் படத்தின் விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார்.சின்னத்திரை தொடரான சரவணன் மீனாட்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமான கவின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை... மேலும் பார்க்க
இறுதிக்கட்ட பணிகளில் பிரதர் படக்குழு..!
ஜெயம் ரவி - எம். ராஜேஷ் கூட்டணியில் உருவான பிரதர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.இயக்குநர் எம். ராஜேஷ், ‘சிவா மனசுல சக்தி’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ’ஆல் இன் ஆல் அழகுராஜா’ உள... மேலும் பார்க்க