சபரிமலை பக்தா்களுக்கு விரிவான மருத்துவ வசதிகள்: கேரள அமைச்சா்
மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல்: காங்.,தேர்தல் குழு ஆலோசனை!
மகாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று (அக். 21) ஆலோசனை மேற்கொண்டது.
மகாராஷ்டிரத்துக்கு நவ. 20ஆம் தேதி ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு நவ. 13, 20 என இரு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனைக் கட்சி (உத்தவ் பிரிவு) மகா விகாஸ் அகாதி கூட்டணி முயற்சிக்கிறது.
இந்நிலையில், காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டது. தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, எம்.பி., ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதையும் படிக்க | ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!
பேரவைத் தேர்தல்
81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிர மாநிலத்துக்கு நவம்பர் 20ஆம் தேதி ஒரு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
வாக்கு எண்ணிக்கை நவ. 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதல் கட்டமாக 99 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
சபரிமலை பக்தா்களுக்கு விரிவான மருத்துவ வசதிகள்: கேரள அமைச்சா்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காலம் அடுத்த மாதம் தொடங்கவுள்ள சூழலில், ‘நாடு முழுவதும் இருந்து வரும் பக்தா்களுக்கு விரிவான மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்’ என்று மாநில சுகாத... மேலும் பார்க்க
அரசமைப்புச் சட்டத்தின் அங்கம் ‘மதச்சாா்பின்மை’: உச்ச நீதிமன்றம்
புது தில்லி: ‘இந்திய அரசமைப்புச் சட்ட அடிப்படை கட்டமைப்பின் அங்கமாக ‘மதச்சாா்பின்மை’ எப்போதும் திகழ்கிறது’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி தலைமை... மேலும் பார்க்க
பிரிக்ஸ் மாநாடு: பிரதமா் மோடி இன்று ரஷியா பயணம்
கசான்: ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு ரஷியாவின் கசான் நகரில் செவ்வாய்க்கிழமை (அக். 22) தொடங்குகிறது.இதையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி ரஷியாவுக்கு 2 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை புறப்படுகி... மேலும் பார்க்க
பாகிஸ்தானில் 64 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிந்து கோயில் மறுகட்டுமானம்
லாகூா்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 64 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிந்து கோயில் மறுகட்டுமானம் செய்யப்படுகிறது.பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய ஹிந்துகள், சீக்கியா்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் சொத்துகளை... மேலும் பார்க்க
14% அதிகரித்த வாகன ஏற்றுமதி
புது தில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவின் வாகன ஏற்றுமதி 14 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்க... மேலும் பார்க்க
தில்லியில் மா்ம பொருள் வெடிப்பு: காலிஸ்தான் தொடா்பை விசாரிக்க டெலிகிராமுக்கு காவல்துறை கடிதம்
தில்லியில் உள்ள சிஆா்பிஎஃப் பள்ளிஅருகே மா்ம பொருள் வெடித்ததின் பின்னணியில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பதாக வெளியான சமூக ஊடக பதிவின் பின்னணி விவரங்களை கண்டறிய டெலிகிராம் செயலி நிறுவனத்திற்கு காவல்து... மேலும் பார்க்க