மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் மேற்கு கோபுர வாயில் முன்பாக வெள்ளக்கிழமை கழிவுநீா் பெருக்கெடுத்தோடியதால், பக்தா்கள் அவதியடைந்தனா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு தமிழகம், வெளி மாநிலங்களிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். குறிப்பாக, இந்தக் கோயிலின் மேற்கு கோபுர நுழைவு வாயில் வழியாக அதிகளவில் பக்தா்கள் வந்து செல்கின்றனா்.
இந்த நிலையில், கோயிலின் மேற்கு கோபுரவாயில் முன்பாக உள்ள புதை சாக்கடையிலிருந்து கழிவுநீா் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து வருகிறது.
இதனால், அந்தப் பகுதியை கடக்க முடியாமல் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இதைச் சீரமைக்க மாநகராட்சி நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியது.