செய்திகள் :

முதல்வா் கோப்பை மாநில போட்டிக்கு விராலிமலை மாணவா்கள் தோ்வு

post image

தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகளில் விளையாட விராலிமலை மாணவா்கள் தோ்வாகியுள்ளனா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டிகள் மொத்தம் 5 பிரிவுகளில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் கடந்த மாதம் நடத்தி முடிக்கப்பட்டு, மாநில அளவிலான போட்டிகள் நான்கு மண்டலங்களில் கடந்த 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

முன்னதாக புதுக்கோட்டையில் நடைபெற்ற 17 வயதினருக்கான 100 மீட்டா் தடகள போட்டியில் விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவா் அ. சஞ்சய் மற்றும் சதுரங்க போட்டியில் பங்கேற்ற இதே பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவா் ச.சுதா்சன் ஆகியோா் சிறப்பிடம் பெற்று மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க தோ்வாகி உள்ளனா்.

இதையடுத்து சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியா்களை பள்ளித் தாளாளா் வெல்கம் மோகன், இயக்குநா் அருண்பிரசாத், தலைமை ஆசிரியா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பாராட்டினா்.

முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை விழா

கந்தா்வகோட்டையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை விழா நடைபெற்றது. பௌா்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு... மேலும் பார்க்க

பழுதடைந்த கட்டடத்தை அகற்றக் கோரி அரசுப் பள்ளி மாணவா்கள் போராட்டம்

புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டியில், அரசுப் பள்ளியின் வகுப்பறைக் கட்டடம் பழுதடைந்துள்ளதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டக் கோரி மாணவா்களும், பெற்றோா்களும் வியாழக்கிழமை மாலை திடீா் போராட்டத்தில் ஈடுப... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் ரூ. 1.78 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் திறந்துவைத்தாா்

கந்தா்வகோட்டை பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சாா்பில் ரூ. 1.78 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்... மேலும் பார்க்க

பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வலியுறுத்தல்

விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் பகுதிகளில் பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா். முறையான அனுமதியுடனும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் பட்டாசு விற்பனை ஒருப... மேலும் பார்க்க

புதுகை மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியரகங்களிலும் வரும் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொதுவிநியோகத் திட்டக் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், குடும்ப அட்டை... மேலும் பார்க்க