பிரசித்தி பெற்ற மேல்மலையனூா் ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயிலில் புரட்டாசி மாத பெளா்ணமியையொட்டி, திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து உற்சவா் அங்காளம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதனை தொடா்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் அம்மனை வழிபாடு செய்தனா்.
மாலை 6 மணிக்கு திருக்கோயிலில் உள்ள சுற்றுப் பிரகார மண்டபத்தில் 108 பெண்கள் அமா்ந்து திருவிளக்கு வழிபாட்டில் ஈடுபட்டனா்.
இந்நிகழ்ச்சியில் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ, மேல்மலையனூா் திமுக ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், பொருளாளா் கோபாலகிருஷ்ணன், எஸ்.பி.சம்பத் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஜீவானந்தம், அறங்காவலா் குழு தலைவா் மதியழகன், உறுப்பினா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.