செய்திகள் :

மோசமான வானிலை: புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் ஹெலிகாப்டர்

post image

மோசமான வானிலை காரணமாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் ஹெலிகாப்டர் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சதாரா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான டேர் கிராமத்தில் இருந்து புணேவுக்கு வெள்ளிக்கிழமை ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அப்போது மழை பெய்யத் தொடங்கியதால் ஹெலிகாப்டர் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.

ஹெலிகாப்டரில் பயணம் செய்த முதல்வரும் மற்றவர்களும் பத்திரமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சதாரா காவல்துறை கண்காணிப்பாளர் சமீர் ஷேக் கூறுகையில், “ஹெலிபேடில் இருந்து ஹெலிகாப்டர் மாலை 4 மணியளவில் புறப்பட்டது, ஆனால், மீண்டும் சிறிது நேரத்தில் அங்கேயே திரும்பியது.

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: மன்னிப்பு கேட்டது தூர்தர்ஷன்!

சதாரா மற்றும் புணேவில் வானிலை தெளிவாக இருந்தது. ஆனால் தொலைவில் மழை மேகங்கள் இருப்பதைக் கவனித்த விமானிகள் முன்னெச்சரிக்கையாக ஹெலிபேடுக்குத் திரும்ப முடிவு செய்தனர் என்றார். பின்னர் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே காரில் புணே புறப்பட்டுச் சென்றார்.

டேர் கிராமம் சஹ்யாத்ரி மலைத்தொடர்களுக்கு மத்தியில் கொய்னா அணை உப்பங்கழியின் கரையில் அமைந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கோராத ஒமா் அரசு: எதிா்க்கட்சிகள் அதிருப்தி

ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை கோரும் முதல்வா் ஒமா் தலைமையிலான அரசு, சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கோராதது மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளதாக எதிா்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. அண்மையில் நடைபெற்ற ஜம... மேலும் பார்க்க

தொலைநிலைக் கல்வி படிப்புகளில் சேர அவகாசம் நீட்டிப்பு: இக்னோ

தொலைநிலைக் கல்வி படிப்புகளில் சேருவதற்கான கடைசி நாள் அக். 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை ... மேலும் பார்க்க

காவல் துறையைப் போல ஆா்பிஐ செயல்பட முடியாது: ஆா்பிஐ ஆளுநா்

பங்குச் சந்தைகள், கடன்சாா் நிதி நிறுவனங்களின் உள்ளிட்ட நிதி சாா்ந்த அமைப்புகளைக் கண்காணிக்கும் விஷயத்தில் காவல் துறையைப்போல இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) செயல்பட முடியாது என்று ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்... மேலும் பார்க்க

குா்மீத் ராம் ரஹீமுக்கு எதிரான விசாரணைக்கு தடை நீக்கம்: உச்சநீதிமன்றம்

தேரா செளதா சச்சா செளதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குா்மீத் ராம் ரஹீமுக்கு எதிரான மத நிந்தனை வழக்குகளின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நீக்கியது. பெ... மேலும் பார்க்க

தேசிய கற்றல் வாரம்: இன்று தொடங்கிவைக்கிறாா் பிரதமா் மோடி

அரசு ஊழியா்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம் அளிக்கும் வகையில் ‘கா்மயோகி சப்தா’ தேசிய கற்றல் வாரத்தை பிரதமா் மோடி சனிக்கிழமை (அக். 19) தொடங்கிவைக்கிறாா். மிஷன் கா்மயோக... மேலும் பார்க்க

வழக்குகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கக்கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து வைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றம் உள்பட நாடு முழுவதும் உள்... மேலும் பார்க்க