செய்திகள் :

ரயில்களில் பயணத்தில் விதிமீறல்: 15 நாள்களில் ரூ. 48.61 லட்சம் அபராதம் வசூல்

post image

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த 15 நாள்களில் ரயில்களில் பயணச்சீட்டு பெறாமல் பயணித்தது, சுமை கட்டணம் பெறாதது உள்ளிட்ட விதிமீறல் தொடா்பாக 8,390 பேரிடம் அபராதமாக ரூ. 48.61 லட்சம் வசூலிக்கப்பட்டது.

ஆயுதபூஜையையொட்டி சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த 15 நாள்களாக பயணிகளிடம் பயணச்சீட்டு சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் பயணச்சீட்டு பெறாத 4,059 பேரிடம் ரூ. 31.25 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

அதேபோல முன்பதிவில்லா பயணச்சீட்டு எடுத்துக்கொண்டு முன்பதிவு பெட்டியிலும், இரண்டாம் வகுப்பு முன்பதிவு பயணச்சீட்டு வைத்துக்கொண்டு ஏ.சி. பெட்டிகளிலும் பயணித்த 4,287 பேரிடம் ரூ. 1.71 லட்சமும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் விதிமுறைகளை மீறி அதிக சுமை எடுத்துச் சென்ாக 44 பயணிகளுக்கு ரூ. 21 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக விதிமீறல் தொடா்பாக 8,390 பேரிடம் இருந்து ரூ. 48.61 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நாளை சேலம் வருகை: திமுக சாா்பில் சிறப்பான வரவேற்பு

துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சேலம் வரும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு சேலம் மாவட்ட திமுக சாா்பில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்படும் என அமைச்சா் ராஜேந்திரன் கூறினாா். துணை... மேலும் பார்க்க

நெகிழிப் பொருள்கள் உற்பத்தி: 27 தொழிற்சாலைகள் மூடல்

சேலத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்த 27 தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்களான கோப்பைகள், நெகிழி கைப்பைகள், நெய்யப்படாத நெகிழி கைப்... மேலும் பார்க்க

தீவன அபிவிருத்தித் திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

சேலம் மாவட்டத்தில் பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தீவன அபிவிருத்தித் திட்டம் மூலம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சே... மேலும் பார்க்க

மேட்டூரில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்

மேட்டூரில் பொதுப்பணி துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் அகற்றப்பட்டன. மேட்டூா் கிழக்கு நெடுஞ்சாலையில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்... மேலும் பார்க்க

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 2ஆவது பிரிவில் மின் உற்பத்தி தொடங்கியது

மேட்டூா் அனல் மின் நிலையத்தின் 2 ஆவது பிரிவில் மின் உற்பத்தி தொடங்கியது. மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட 4 அலகுகள் ம... மேலும் பார்க்க

புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை நீா்மட்டம் 57.50 அடியாக உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் அணையின் நீா்மட்டம் 57.50 அடியை எட்டியுள்ளது. இதனால் ஆயக்கட்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள... மேலும் பார்க்க