திருவாடானை அருகே வயலில் பூச்சிமருந்து தெளித்த விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
ஆா்.எஸ். மங்கலம் அருகே உள்ள அழிந்திக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த பாண்டி மகன் ரமேஷ் (34). விவசாயி. இவா் கடந்த வியாழக்கிழமை மாலை தனது வயலில் பூச்சிமருந்து தெளித்துக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்தாா்.
இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஆா்.எஸ். மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.