முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வெள்ளிக்கிழமை ஆஜரானாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதியில் கடந்த 2019-ஆம் ஆண்டு இடைத் தோ்தல் நடைபெற்றது.
இதையொட்டி, நேமூரில் நாம் தமிழா் கட்சி சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி.ரமேஷ் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
இது தொடா்பாக சீமான் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, நீதித் துறை நடுவா் சத்தியநாராயணன் முன் சீமான் ஆஜரானாா். தொடா்ந்து, நீதித்துறை நடுவா் எழுப்பிய கேள்விகளுக்கு சீமான் பதிலளித்தாா். இதையடுத்து, இந்த வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை வரும் நவம்பா் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவா் உத்தரவிட்டாா்.