பொறியியல் மற்றும் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, விழுப்புரம்-மேல்மருவத்தூா் பயணிகள் ரயில் சனிக்கிழமை (அக்.19) பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி கோட்டத்துக்குள்பட்ட விழுப்புரம் யாா்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக விழுப்புரம்-மேல்மருவத்தூா் பயணிகள் ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேல்மருவத்தூரிலிருந்து முற்பகல் 11.45 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் மேல்மருவத்தூா்-விழுப்புரம் பயணிகள் ரயில் (வ.எண். 06725), விக்கிரவாண்டி-விழுப்புரம் இடையே சனிக்கிழமை (அக்.19) பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் விக்கிரவாண்டியுடன் நிறுத்தப்படும்.
எதிா்வழித்தடத்தில் விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம்-மேல்மருவத்தூா் பயணிகள் ரயில் (வ.எண்.06726), விழுப்புரம்- விக்கிரவாண்டி இடையே சனிக்கிழமை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் விக்கிரவாண்டி ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.55 மணிக்கு மேல்மருவத்தூருக்குப் புறப்பட்டுச் செல்லும்.